Saturday, May 27, 2023

keechikural

Magarakattu Maruthuvam

Tuesday, May 16, 2023

Monday, May 15, 2023

Puberphonia work shop

தெளிவான குரல் பயிற்சி  பட்டறை: தேவை நேரம் --- (15 mints to 30 mints) 
திருமூலர்,ஔவையார்,தொல்காப்பியர் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி நாங்கள் குரல் பயிற்சியை உருவாக்கியுள்ளோம்.
பங்குபெறுவோர்.
முனைவர் லலிதா சுந்தரம் MA,Phd, E.லலிதா, K.லதா, V.காயத்ரி, K.சாந்தி, Dr.குமரேசன் மற்றும்   Dr.நவீன் பாரத் 
 
தெளிவான குரல் திறன்களைக் கற்பிப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். இதில் பங்கேற்பவர்களுக்கு   கம்பிரமான, தெளிவான குரல் கிடைக்கும். 
நன்றி!
     உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றோம்
--------------------------------------------------

Friday, May 12, 2023

Happy

Treat Puberphonia by "interventional voice therapy" There is a miracle in every new beginning. புதிதாய் மலரும் ஒவ்வொரு நிகழ்வும் அதிசயம் ஆனால் உண்மை.

Friday, May 5, 2023

புதிய புத்தகம் பகுதி 4

பகுதி IV       பாலியல் மெய்யும் பொய்யும்  பக்கம் 1-9
உடல் முழுவதுமே பாலுறுப்பு தான். ஆகவே பாலுறவு அசிங்கமானது என்று கூறினால் மொத்த உடலும் அசிங்கமானது என பொருளாகிறது. ஆணும் சரி பெண்ணும் சரி, ஆபாசப் படங்களில் காட்டப்படுபவை அனைத்தும் உண்மை என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. திரைப்படங்களில் காட்டப் படுவதெல்லாம் உண்மையென ஒரு குழந்தை நம்புவதைப் போன்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கை ஆழ்மனதில் பதிவாகிவிடுகிறது. மனித உடலில் நிகழும் பாலின்பம் ஒரு பேரின்ப அனுபவம் மட்டுமல்ல. உடல் நலத்தையும் மன நலத்தையும் சிறப்புறப் பேணக் கூடிய ஒரு மாமருந்து. மேலும் எவ்விதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு அரு மருந்து. மூளையை அற்புதமாகச் செயல்படச் செய்கின்ற ஒரு அமிர்தம். இன்றைய மருத்துவ அறிவியலும், உளவியலும் பாலின்பத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது. இந்த மருத்துவத்திற்காக தனியாக பணத்தைச் செலவளிக்கத் தேவையில்லை. வீட்டை விட்டு வெளியில் எங்கும் சென்று தேடத் தேவையுமில்லை. அது தவிர அன்பெனும் கடவுளைத் தம்பதியிரிடையே உருவாக்கி குடும்ப வாழ்க்கையைச் சொர்க்கமாக மாற்றக் கூடிய ஒரு மந்திர சக்தியும் கூட. உடலில் நிகழும் உச்ச கட்ட பாலின்பத்தால் ஏற்படுகின்ற நன்மைகளை பட்டியலிடத் தொடங்கினால் வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்தையும் தான் பட்டியலிட வேண்டும். இந்த உண்மை இருபாலருக்கும் பொருந்தும். மனித இனத்திற்கு மட்டுமே இயற்கையாய் வழங்கப்பட்ட சிறப்புக்கொடை பாலின்பம். குட்டிபோட்டு பாலூட்டி வளர்க்கும் விலங்குகள் அனைத்தும் இனவிருத்திக்காக மட்டுமே இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. மனித இனம் மட்டுமே இன்பத்திற்காகவும் பாலுறவில் ஈடுபடுகிறது அதனால் எந்தவொரு விலங்கினத்தையும் விடப் பலமடங்கு கூடுதலாக பாலுறவில் ஈடுபடுகிறது. அவ்வாறு பாலின்பத்தில் ஈடுபட்டபோதெல்லாம் அறிவை வளர்க்கும் வேதிகள் மனித மூளையில் சுரக்கின்றன. அதனால் மனித இனத்தின் அறிவு வளர்ந்து கொண்டேயிருக்கிறது .அறிவு வளர்ச்சி காரணமாக தன்னையொத்த விலங்கினங்களை விட புத்திசாலித்தனமான விலங்கினமாக மனித இனம் உருவாகி, இறுதியில் உயிரினங்களின் நிரந்தரமான ஆட்சியாளனாக உயர்ந்து நிற்கிறது மிருகங்களோடு மிருகமாக வாழ்ந்து கொண்டிருந்த மனித இனத்தை மிருகங்களின் தலைவனாக உணர்த்தியது மூளை. அந்த மூளையை அவ்வாறு இயங்க வைத்தது இயற்கையால் வழங்கப்பட்ட பாலின்பம்.

பாலியலில் பொதுவாக நிலவும் தவறான கருத்துக்கள் எவை?
விந்து வெளியேறினால் சக்தி வெளியேறுகிறது. விந்து என்பது இரத்தம், சுயஇன்பம் செய்வது பாவச் செயல் இவைகள் அதிகளவில் ஆண்களிடையே நிலவும் தவறான கருத்துக்களாகும். மேலும், பிரம்மச்சரியம், கன்னித்தன்மை, சிறிய ஆணுறுப்பு ஆகியவை பற்றியும் பல தவறான கருத்துக்கள் உள்ளன. இந்த கருத்துக்கள் தலைமுறை தலைமுறையாக பரப்பப்பட்டு வந்துள்ளன. இதனால் சிறிய பிரச்சினை உள்ள நபர் கூட, மேலும் பல பிரச்சினைகள் தனக்கு இருப்பதாக நம்பிக் குழம்பிப் போகிறார்.
பாலுணர்வின் ஒரு பகுதி சுய இன்பம். பாலுறவில் ஈடுபடுவது போன்ற கற்பனையில் அனுபவிக்கும் இந்த சுய இன்பப் பழக்கம் 95 சதவீத ஆண்களிடம் உண்டு. சுய இன்பப் பழக்கம் ஒரு தற்காலிக நிவாரணத்தைத் தருகிறது. இது தவறான பழக்கம் இல்லை. இதுவும் இயற்கையின் ஒரு பகுதியாகும்.
சுய இன்பம் என்றால் என்ன?
பாலுறுப்புக்களை தனக்குத்தானே தூண்டி உச்ச நிலையை அடையும் வரை சுகம் அனுபவிப்பது தான் சுயஇன்பம்.
ஆண்களைப் போல் பெண்களும் சுயஇன்பம் அனுபவிக்கிறார்களா?
ஆம். 
சுயஇன்பத்தால் தீங்கு விளையுமா?
நிச்சயமாக இல்லை. உடலுறவால் எந்தத் தீமையும் இல்லை என்று கூறும்போது, சுயஇன்பத்தால் மட்டும் எப்படி தீங்கு விளையும்? உடலுறவுக்கு முன்மாதிரி, ஒத்திகை போலத்தான் இது. இதனால் ஆபத்து என்ற கட்டுக்கதை காலங்காலமாக நிலவிவருகிறது. கண்களின் கீழ் கருவளையம் படரும், நரம்புத் தளர்ச்சி, மூட்டுக்களில் வலி, ஆண்மைக்குறைவு, புத்தி சுவாதீனமின்மை ஆகியவை ஏற்படும் என்பவையெல்லாம் வெறும் மூடநம்பிக்கைகள் தான்.உண்மையில், சுயஇன்பத்தின் மூலம் நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகிறது. இது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருப்பதால் பாலுறவுக் குற்றங்கள், கற்பழிப்பு போன்றவை அதிகம் நிகழ்வதில்லை. தேவையில்லாத கர்ப்பங்கள் ஏற்படுவதில்லை. இந்த முறை பாதுகாப்பாக இருப்பதால் பாலியல் நோய்கள் பரவுவதில்லை.
சுயஇன்பத்தில் அதிகமாக ஈடுபட்டால் தீங்கு உண்டாகுமா?
அதிகம், குறைவு என்ற அளவுகோல்கள் ஒன்றும் இதற்கில்லை. அடிக்கடி உடலுறவு கொள்வதால் எந்த நட்டமுமில்லை. அதுபோலத்தான் இதுவும். உடலுறவில் ஆணும் பெண்ணும் இணைந்து ஈடுபடுகிறார்கள். இதில் தனித்தனியே செயல்படுகிறார்கள் அவ்வளவுதான்.
பல ஆண்டுகளாகத் தினமும் தொடர்ந்து இரண்டு மூன்று தடவைகள் சுயஇன்பம் பெறுபவர்களை மருத்துவ ரீதியாகப் பரிசோதித்த போது, அவர்களெல்லாம் ஆரோக்கிய மாக இருப்பது தெரிந்தது. இரத்தம், விந்தின் அளவு, செயல்திறன் ஆகியவை வழக்கம்போல் நன்றாக இருந்தன. இந்தச் சோதனை பல நாடுகளில் பல முறை நிகழ்த்தப்பட்டு இந்த உண்மை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
சுயஇன்பப் பழக்கத்தைக் குணப்படுத்த முடியுமா?
குணப்படுத்த இதுவொன்றும் நோயல்ல. இது இயல்பானது. தேவையானது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அறியாமையால் இதுபற்றித் தேவையில்லாத கவலையில் ஆழ்வதை வேண்டுமானால் நோய் என்று சொல்லலாம்.
அதிகமான விந்து வெளியேற்றத்தால் மூப்புத் தோற்றம் ஏற்படுகிறதா?
விந்து வெளியேற்றத்தால் எந்தவிதத் தீங்கும் கிடையாது.வயதாவதற்கும் மூப்புத் தோற்றம் ஏற்படுவதற் கும் அது காரணமல்ல. விந்து ஆண்களின் உடலில் நாளுக்கு நாள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. தன் உடலிலேயே விந்தை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தாலும் அது நடக்காத காரியம். பலர் நினைப்பது போல விந்து உயிர் நிலை அல்ல. ஒரு துளி விந்து என்பது நூறு துளி இரத்தமும் அல்ல. ஆகவே, வீண் கவலை வேண்டாம்.
விந்தின் அளவு குறைவாக இருத்தல், விந்தின் நிறம் மாறுதல் ஆகியவை ஆண்மைக் குறைவின் அறிகுறிகளா?
இல்லை. இல்லவே இல்லை. விந்தின் அளவு என்பது கிளர்ச்சியின் செறிவு, உறவுகளுக்கு இடையேயான கால இடைவெளி, வயது ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. மனிதனுக்கு வயதாக வயதாக விந்தின் நிறம் வெள்ளையில் இருந்து லேசான மஞ்சளாக மாறுகிறது. விந்தின் அளவும் குறைகிறது. விந்தின் அளவோ, நிறமோ ஒருபோதும் பாலியல் இன்பத்தைத் தீர்மானிப்பதில்லை. இணையின் திருப்தியும் இதனால் குறைவதில்லை.
தூக்கத்தில் விந்து வெளியேறினால் உடல் பலவீனமாகி விடுமா?
இதுவும் தவறான கருத்துதான். இது முழுக்க முழுக்க உளவியல் சம்பந்தப்பட்டது. குழந்தைப் பருவம் முதற் கொண்டு விந்து வெளியேறினால் போயே போச்சு. விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது போன்ற தவறான கருத்துக்கள் திணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. நமது பிறப்புறுப்புக்களும், அவை சார்ந்தவையும் இரகசியமானவை. அவை பற்றி பேசவும் கூடாது என்ற நிலைக்கு நம் மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து விந்து வெளியேற்றத்தினால்தான் நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது என்பது வரை பல தவறான கருத்துக்கள் உருவாகியிருக்கின்றன. தூக்கத்தில் விந்து வெளியேறுவதால் பலவீனம், சோர்வு ஆகியவை ஏற்படுவதில்லை.
சுயஇன்பத்தில் ஈடுபடுவதால் ஆண்குறி வளைந்து போகுமா?
இல்லை. இயல்பாகவே பலருக்கு சிறிது வளைந்த நிலையில் இருக்கும். இதனால் உடலுறவின் போது எந்தப் பாதிப்பும் இல்லை.
விந்துவை சுயஇன்பத்தின் மூலம் வீணாக்கலாமா? வீணாக்கினால் முதுமை விரைந்து வருமா?
எச்சிலைப் போன்றது தான் விந்துவும். வேண்டும் போதெல்லாம் சுரந்து கொண்டிருக்கும். ஒருதுளி விந்து, 1000 துளி இரத்தத்துக்கு சமம் என்பதெல்லாம் தவறான கருத்தாகும். இரத்தத்துக்கும் விந்துவுக்கும் உடல்ரீதியா எந்த சம்பந்தமுமில்லை. புராஸ்டேட், செமினவெசிகில்ஸ் போன்ற சுரப்பிகளால் சுரக்கப்படுவதுதான் விந்தாக வெளிவருகிறது. இதில் கர்ப்பத்தை உண்டாக்கு ஆண் உயிரணுக்களின் அளவு ஒரு சதவீதம்தான் இருக்கும். விந்து வீணாகிறதே என்ற பயம் யாருக்கும் தேவையில்லை. 
மாதர் போகம் மாதமிருமுறை என்ற பழங்கால கருத்தெலாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தவறான கருத்தாகும்.
விந்தின் அளவு குறைவது ஆண்மைக் குறைவின் அறிகுறியா?
அல்ல. வெளிவரும் விந்தின் அளவு பல்வேறு காரணங்களால் வேறுபடும். நீண்ட இடைவேளை மற்றும் முழுமையான உணர்ச்சித் தூண்டுதல்களின் போது அளவு அதிகரிக்கலாம். வயது அதிகமாகும் போது அளவு குறையலாம். விந்தின் அளவுக்கும் உடலுறவின் செயல்திறனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
விந்தின் நிறமாறுபாடு, நீர்த்திருத்தல் ஆகியவை ஆண்மைக் குறைபாடாகுமா?
இல்லை. வயது அதிகரிக்கும்போது நிறம் வெளி மஞ்சளாகும். நீர்த்திருப்பது உடலுறவு இன்பத்துக்கோ கர்ப்பத்துக்கோ இடையூறு அல்ல.
தூக்கத்தில் விந்து வெளியாவது உடல் சோர்வை உண்டாக்குமா?
இல்லை. தவறான விளம்பரங்களின் மூலம் இந்தக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. விந்துவின் முக்கியத்துவம் பற்றிய மூட நம்பிக்கைகள் சிறுவயதிலேயே தவறான விளம்பரங்கள் மற்றும் ஆட்கள் மூலம் மனதில் பதிந்து போவதால் ஏற்படும் பயம்தான் இது. விந்து வெளியாவதால் நாம் இழக்கும் கலோரி, ஒரு எலுமிச்சம் பழச்சாறு கொடுக்கும் சக்தியின் அளவுதான் இருக்கும்.
விந்தை அடக்கி வாழ்ந்தால் ஆயுள் கூடும்; விளையாட்டு வீரர்களாகத் திகழலாம் என்பது உண்மையா?
இல்லை. அப்படியானால் உண்மையாகவே பிரம்மக சாரிகளாக இருப்பவர்களெல்லாம் விளையாட்டு வீரர்களாக அல்லவா இருக்க வேண்டும்? 

பிரம்மச்சரியம் என்றால் என்ன?
பாலியல் செயல்களை முற்றாக நிராகரிப்பதே பிரம்மச்சரியம். நீண்ட நாள் உறவு கொள்ளாமலிருப்பது உடலுக்கு நல்லதா? உறவு கொள்ளாமல் விந்துவை அடக்கி வைத்திருப்பது நல்லது என சிலர் கருதுகின்றனர். ஆனால், அது சற்றும் உண்மையல்ல. சொல்லப் போனால், நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால்தான், செய்யும் பணிகளில் கவனமின்மை உட்பட பலவித மனநலப் பிரச்சினைகள் தோன்றக்கூடும். அதன் பின் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உறவுகொள்ள விரும்பினாலும் உறுப்பின் ஒத்துழைப்பு குறைவாகவே இருக்கும்.
பிரம்மச்சரியம் நல்லதா?
இது இயற்கைக்கு எதிரானது. தவறான நம்பிக்கைகளால் விந்தைப் பாதுகாப்பதன் மூலம் உடல்நலத்தைப் பேண முடியும் என்று கருதுகிறார்கள். அவர்களால் அது முடியாமல் போகும்போது குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி பல்வேறு மனப் போராட்டங்களுக்கு ஆட்படுகிறார்கள். திட்டமிட்டு உணர்ச்சிகளை அடக்கி வைப்பதும் பாலுறுப்புக்களை செயல்படுத்தாமல் இருப்பதும், பிறகு தேவைப்படும் போது பிரச்சினைகளை உருவாக்கும். உடலைத் தன்போக்கில் இயங்க விடுங்கள். பிரம்மச்சரியத் தால் எந்தப் பயனும் இல்லை. தீங்குகள்தான் உண்டு.
திருமணமானவர்களும் சுயஇன்பத்தில் ஈடபடுபவர்ககளா?
ஆமாம். மனைவி இல்லாதபோது அல்லது ஒத்துழைக் காத போது ஆண்கள் இதில் ஈடுபடுகிறார்கள். மனதில் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு இதில் ஈடுபடும் போது கிடைக்கும் இன்பத்தைப் பலர் விநோதமாக உணர்கிறார்கள். இது இயல்பானதுதான். தவறேதுமில்லை. ஆண்களை விடவும் திருமணமான பெண்களுக்கு சுயஇன்பம் மன நிம்மதியை அளிக்கிறது. உடலுறவின் போது பெண்கள் உச்சக்கட்டத்தை எட்ட முடியாமல் போகலாம். அதிகமாக அப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது. அந்த நிலையில் ஏக்கமும் எரிச்சலும் அடையாமல் பெண்கள் இந்த முறையைக் கையாண்டு சுலபமாக உச்சக்கட்டப் பரவசத்தை அடைகிறார்கள்.
மிகவும் வயதான பின்பு சுயஇன்பத்தில் ஈடுபட லாமா?
உடலுறவுக்கு வயது ஒரு தடையல்ல. ஆர்வமும் ஆரோக்கியமும் இருந்தாலே போதும். ஆகவே, சுயஇன்பம் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?
சுயஇன்பப் பழக்கத்தால் உடலுறவின் போதோ. கர்ப்பத்திலோ பெண்களுக்குப் பிரச்சினைகள் வருமா?
 நிச்சயமாக இல்லை.
சுயஇன்பத்திற்காக பெண்கள் சில பொருட்களை நாடுவது நல்லதா?
மேலை நாடுகளில் இதற்கென பல்வேறு விதங்களில் செயற்கையான ஆணுறுப்புகள் (Vibrator) கிடைக்கின்றன. நம் நாட்டில் அதை வாங்குவதோ, பாதுகாப்பாக வைத்திருப்பதோ சுலபமல்ல.
மாதவிலக்குச் சமயங்களில் பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபடலாமா?
சுத்தமாக இருக்கும்பட்சத்தில் ஆர்வமிகுதியால் உடலுறவிலும் ஈடுபடலாம். ஆணுக்கோ பெண்ணுக்கோ இதனால் பாதிப்பில்லை. அதுபோலவே விரும்பினால் சுயஇன்பமும் பெறலாம்.
பொதுவாக, எந்த வயதில் சுயஇன்பப் பழக்கம் ஏற்படுகிறது?
பருவம் தொடங்கும்போது தற்செயலாகவே தொடு உணர்ச்சியின் மூலம் இந்த இன்பத்தைத் தெரிந்துகொண்டு பிறகு அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறார்கள்.
எத்தனை சதவீதம் பேர் இந்தப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள்?
மேலை நாடுகளில் 100% பேரிடம் இந்தப் பழக்கம் உண்டு என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் இதுபற்றிய ஆய்வுகள் அதிகம் செய்யப்படவில்லை. ஒரு சில ஆய்வுகள் ஆண்களில் 90%க்கு மேலும், பெண்களில் 60%க்கு மேலும் இதில் ஈடுபடுவதாகக் கூறுகின்றன. உண்மையில் இந்த அளவு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கன்னித்திரை (Hymen) கிழிபடாமல் இருந்தால்தான் ஒருத்தியைக் கன்னியாகக் கருத முடியுமா?
காலங்காலமாக இருந்து வரும் தவறான கருத்து இது உடலுறவு கொள்ளாமலேயே கன்னித்திரை கிழியக் கூடும். விளையாடும் போதோ, விரலால் சுயஇன்பம் அனுபவிக்கும் போதோ அது கிழிந்துவிடக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எல்லோருமே கன்னித்திரை பற்றிய தவறான கற்பனை யில் இருக்கிறார்கள். கன்னித்திரை பெண்புழையை முழுமையாக அடைத்திருக்கும் கதவு என்றும், முதன்முதலாக உடலுறவு கொள்ளும்போதுதான் அந்தக் கதவு உடைக்கபடுகிறது என்றும், அந்த உடைப்பின் போது கசியும் இரத்தம் தான் அவள் கன்னித் தன்மையை அறிவிக்கும் அடையாளம் என்றும் தவறாகக் கருதுகிறார்கள்.
அப்படியானால், உண்மை என்ன? பதிலளிக்கும் முன்பு ஒரு எளிமையான கேள்வி. கன்னித்திரை பெண் புழையை முழுமையாக அடைத்திருந்தால் மாதவிலக்கு எப்படி வெளியே வரும்? உண்மையில் கன்னித்திரை மிக மெல்லிய ஒரு சவ்வுதான். அது பெண்புழையில் நுழைவாயிலின் கீழ்ப் பகுதியில் பாதியளவுக்கும் குறைவாகத்தான் அடைத் திருக்கும். அதன் விளிம்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். கிழிவதால் வரும் இரத்தம் சில துளிகளோ, ஒரு துளியாகவோக் கூட இருக்கும். படுக்கையில் கறை படியும் அளவுக்கு இரத்தப் பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை.
கன்னித்திரை பற்றிய மூடநம்பிக்கை பலரது இல்லற வாழ்க்கையை நாசமாக்கியிருக்கிறது. உலகெங்கும் இந்தக் கருத்து நிலவுகிறது. போன நூற்றாண்டில் பிரெஞ்சு சீமாட்டி கள் தங்கள் திருமண இரவில் குருவி இரத்தத்தைப் பயன் படுத்தி கணவன்மார்களை ஏமாற்றினார்களாம்.
உடல் இன்பத்தில் மதனபீடத்தின் (Clitoris) பங்கு என்ன?
பெண்ணுடலில் அதிகபட்ச உணர்ச்சி நரம்புகள் குவிகின்ற இடம் இதுதான். பெண் இன்பம் பெறுவதில் இதுதான் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அளவில் இது துவரம் பருப்பைப் போலவோ அதைவிடச் சிறியதாகவோ இருக்கும். ஆணுறுப்பின் முனைமொட்டும் இதுவும் ஒரே விதமான திசுக்களால் ஆனவை. இதன் மேலே தோல் மூடியிருக்கும். தோலை விரலால் நீக்கி இதன் வடிவத்தைக் காணலாம். இதன் நுனிப் பகுதிதான் வெளியே தெரியும். அடிப்பகுதி ஒரு செ.மீ. ஆழத்தில் பதிந்திருக்கும். அழுத்தினால் யோனி எலும்பில் உராயத்தக்கவாறு அமைந்திருக்கிறது.
பெண் உணர்ச்சி வயப்படும் போது இரத்தம் மதன பீடத்தில் அதிகரித்து (ஆணுறுப்பு விரைப்பது போலவே) அதைச் சற்றே பெரிதாக்குகிறது. அந்த நிலையில் கூட பலருக்கு மூடியிருக்கும் தோலை நீக்கி வெளியே தெரியும் படி இருக்காது. உடலுறவின் சுவர்களில் உள்ள உணர்ச்சி நரம்புகளைவிட பல மடங்கு அதிகமாக மதனபீடத்தில் இருக்கிறது. சுயஇன்பம் பெறும் போது விரல்களால் இதைத் தடவியே உச்சக்கட்ட இன்பத்தை அடையச் செய்ய முடியும். ஆணின் புணர்ச்சிக்கு முன்பாக விரலாலோ, நாவாலோ மதனபீடத்தை வருடிக் கொடுத்து அவளை உணர்ச்சியில் தத்தளிக்க விட வேண்டியது மிகமிக அவசியம். காதல் கலையில் முதலாவதும் மிக முக்கியமானதுமான பாடம் இதுவே.
பெண்ணுடலில் உதடுகள் எந்த அளவுக்கு உணர்ச்சிமிக்கவை?
யோனியின் வெளி உதடுகள் (Labia Majora) ஓரளவுக்குத் தான் உணர்ச்சி நரம்புகளால் பின்னப்பட்டுள்ளன. இதன் முக்கியப் பணி வெளிப்புறத்தில் இருந்து கிருமிகள் உட்புகாதவாறு பாதுகாப்பதுதான். இயல்பான நிலையில் நீரில் நின்றால், நீர் கூட உள்ளே போக முடியாது.
இதன் உட்புறத்தில் வெளிர் நிறத்தில் யோனியின் உள்உதடுகள் (Labia Minora) அமைந்திருக்கின்றன. இதன் மேற்புறம் மதனபீடம் வரை நீண்டிருக்கும். இதன் தோல் வெளிஉதடுகளை விட மென்மையானது. இது லேசான மடிப்புக்களும் அதிக உணர்ச்சி நரம்புகளும் கொண்டது. உணர்ச்சி வயப்படும் போது இது சற்றே தடிமனாகும். புணர்ச்சியின் போது ஆணுறுப்பைச் சுற்றிக் கவ்விக் கொள்ளும். அந்த நேரத்தில் சிவந்தும் காணப்படும். பரவச நிலையை அடைந்த சில நிமிடங்களுக்குப் பின்பு இயல்பான நிறத்துக்கும், நிலைக்கும் இது மாறி விடும்.
பெண்ணுடலில்  ஆழம் ஆளாளுக்கு மாறுபடுமா? 
சராசரியாக எல்லோருக்கும் இது இயல்புநிலையில் ஏழரை செ.மீ. ஆழம்தான் இருக்கும். ஆனால், இது எந்த அளவுக்கும் விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டது. இல்லையேல் ஒரு குழந்தையின் தலை எப்படி வெளியே வரும்? பல பெண்கள் திருமணத்துக்கு முன்பு உடலுறவு பற்றி தேவையில்லாத பயத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். தன்னால் ஒரு ஆணின் ஊடுறுவலைத் தாங்க முடியாது என்று பயப்படுகிறார்கள். இப்படிப் பயப்படும் பெண்களுக்கு மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகள்:
உங்கள் விரலை உள்ளே நுழைத்து சோதித்துப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் விதமாக உள்ளே தேவையான இடம் இருக்கிறது. மெத்தென்ற மென்மையான உட்சுவர்கள் உங்கள் விரலின் அல்லது விரல்களின் போக்கிற்கு இசைந்து விரிந்து கொடுப்பதை உணரலாம். வழவழப்பான நீர் உராய்வின்றி விரல்கள் அசைய உதவும். எவ்வளவு பெரிய ஆணுறுப்பையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில்தான் பெண்ணுறுப்பு அமைந்திருக் கிறது. இது ஆணுறுப்பின் அளவுக்கேற்றவாறு விரிந்து கொடுக்கும் இயல்புடையது. ஆனால், புணர்ச்சிக்கு முன்பு அவளது உணர்ச்சிகள் போதுமான அளவுக்குத் தூண்டப் பட்டு மதனநீர் சுரந்திருக்க வேண்டும். இல்லையேல் உள்ளே நுழைப்பதே கடினமாகி வலியை ஏற்படுத்தும்.
முன்பெல்லாம் இந்த மதனநீர் கருப்பை வாயில் இருந்தோ, மற்ற சுரப்பிகளில் இருந்தோ வருவதாக நம்பினார்கள். இந்த நூற்றாண்டில் தான் மாஸ்டர்ஸ் அண்டு ஜான்சன் என்ற மிகப் பிரபலமான பாலியல் ஆய்வாளர்கள் பெண்புழையின் சுவர்களில் இருந்தே மதனநீர் சுரப்பதாக நிரூபித்தார்கள். பெண் காமவயப்பட்ட 30 விநாடிகளில் இது சுரக்கத் தொடங்கும். உடலுறவில் உணர்ச்சி நரம்புகள் முன்பகுதியில் முதல் மூன்றரை செ.மீ. வரைதான் அதிகமிருக்கின்றன. அதனால்தான், ஆணுறுப்பின் அளவைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை என்கிறார்கள். சிறிய ஆணுறுப்பு உள்ளவர்கள் கூட பெண்ணுக்கு முழு இன்பத்தை அளிக்க முடியும்.
காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனாரின் பல பாலியல் கருத்துக்கள் தவறென்று அறிவியல் நிரூபித்து விட்டது. பெண்களை அவர் நான்கு வகையாகப் பிரித்திருந்தார். நான்கு பிரிவுகளுக்கும் அளவுகள் வெவ்வேறாக இருக்கும் என்று கருதியிருந்தார். ஆனால், இயற்கையின் படைப்பில் எல்லோரும் சமம்தான் (சற்றேறக் குறைய) என அறிவியல் நிரூபித்து விட்டது.
ஜி-குறி (G-Spot) என்றால் என்ன?
இது கடந்த பத்தாண்டுகளில் 'கண்டுபிடித்த' ஒரு விஷயம். உடலுறவில் மேற்சுவரில் மூன்றரை செ.மீ.க்கு அப்பால் விரல் நுனி அளவு இடத்தில் உணர்ச்சி நரம்புகள் கொஞ்சம் கூடுதலாக உள்ளன. இதுதான் ஜீ-குறி என்பது. ஒரு பெண் மட்டுமே இதைத் தன் விரலால் அனுபவித்து உணர முடியும்.
உடலுறவின் போது மதனபீடம் தூண்டப்படுகிறதா?
ஆமாம். ஒவ்வொரு முறை அழுத்தும் போதும் யோனி எலும்புக்கும் ஆணின் எலும்புக்கும் இடையில் நசுங்கியும், பல சமயங்களில் ஆணுறுப்பின் மேற்புறத்தால் உராயப் பட்டும் உணர்ச்சியேற்றப் படுகிறது. முன்பெல்லாம். ஆராய்ச்சியாளர்கள் பெண்புழையின் உட்புறம் ஏற்படும் அழுத்தங்கள் அதிகரித்துத்தான் அவள் உச்சக்கட்டப் பரவச நிலையை அடைவதாகக் கருதினார்கள். இப்போதைய ஆய்வு முடிவுகள் புதிய தகவல்களைத் தருகின்றன. கருப்பை வாயைச் (Cervix) சுற்றிலும் பெண்புழையின் ஆரம்பப் பகுதியிலும் உள்ள உணர்ச்சி நரம்புகள் மட்டுமே பரவச நிலையை அடையச் செய்யப் போதுமானதாக இல்லை. மதனபீடம் தூண்டப் படுவதால் மட்டுமே அந்த நிலையை அடைய முடியும். அந்த அழுத்தங்கள் எல்லாம் மதன பீடத்தைச் சுற்றியுள்ள தசைகளை அசையச் செய்து அதை உராய்வடையச் செய்வதன் மூலமே பரவச நிலையை எட்ட வைக்கிறது. பெண் அந்த நிலையை அடையும் முன்பு விந்து வெளியேறி ஆணுறுப்பு தளர்ந்து விட்டால் இணைகள் இருவரும் கலங்கவோ, ஏமாற்றமடையவோ தேவை யில்லை. இது ஒரு விளையாட்டு. மகிழ்ச்சியான விளையாட்டு. வெற்றி தோல்விகள் சகஜம். உதவிக்கு விரல்கள் உள்ளன. ஆண் கற்பனைத் திறன் உள்ளவனாக இருந்தால் பெண்ணைச்சுவைத்து அனுபவிக்கிறான். முன்னை விடவும் இப்போதுதான் அவள் அவனை அதிகமாக விரும்புகிறாள் என்பதை அவன் உணருகிறான்.
சுற்றியுள்ள ரோமங்களை மழித்து விடுவதுதான் சுகாதாரமானதா?
இல்லை. சுத்தமாக இருந்தாலே போதுமானது. 
மாதவிலக்கு நிற்கும்போது பெண்ணின் உடலுறவில் வேட்கை அதிகரிக்கிறதா? குறைகிறதா?
சிலர் அதிகரிப்பதாகவும், சிலர் குறைவதாகவும் கூறுகின்றனர். 'இனி கருத்தரிக்க மாட்டோம்' என்ற பாதுகாப்பு உணர்வினால் சிலருக்கு பாலியல் வேட்கை அதிகரிக்கக் கூடும். பல பெண்கள் மாதவிலக்கு நிற்பதை (Menopause) உடலுறவின் முற்றுப்புள்ளி என தவறாக எண்ணுவதால் வேட்கையை இழந்து விடுகின்றனர். இந்த எண்ணம் மற்றும் பயம் பூரணமான பாலுறவிற்குத் தடையாக அமைகிறது. உடல் ரீதியான கோளாறுகளாலும் பாலியல் வேட்கை குறையக் கூடும். மாதவிலக்கு நிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கருப்பை ஹார்மோன்களின் கரப்பு குறையத் தொடங்கும்; உராய்வுத் திரவம் குறையத் தொடங்கும்; இதனால் உறவின் போது பெண்ணுறுப்பில் வலி ஏற்படக் கூடும். இதை 'ஈஸ்ட்ரோஜன் மருந்து மூலம் சரி செய்யலாம். அவ்வளவு சிரமம் கூட தேவையில்லை. அதற்கென விற்கும் ஜெல்லி போன்ற கிரீம்களையோ எண்ணெயையோ பயன்படுத்தினாலே போதும்.
மாதவிலக்கு நிறுத்தத்தின் போது ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதா?
அப்போது ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்வதால் பாலுறவில் ஈடுபடும் வேளையில் பெண்ணுறுப்பில் வலி ஏற்படாமல் இருக்கும். இது மாதவிலக்கு நிற்பதால் ஏற்படும் மனச் சோர்வையும் தடுக்கும். இதற்கு மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.
கடைகளில் விற்கப்படும், பத்திரிகை விளம்பரங்களில் கூறப்படும் காம ஊக்க மருந்துகளைப் பயன்படுத்துவதால் பலன் கிட்டுமா?
இல்லை. மருத்துவ அறிவியல் ரீதியாக இம்மருந்துகள் நிரூபணம் செய்யப்படவில்லை. நல்ல ஆரோக்கிய உடலும், மனமும் மட்டுமே முழுமையான பாலியல் இன்பத்திற்குப் போதுமானது. கடைச் சரக்குகளை வாங்கி காசை வீணாக்க வேண்டாம். 
உடலுறவில் உச்சக்கட்டம் என்றால் என்ன?
சிலிர்ப்புநிலை என்று கூறலாம். Orgaos என்ற கிரேக்க வார்த்தையில் இருந்துதான் உச்சக்கட்டப் பரவசத்தைக்குறிக்கும் ஆர்கஸம் என்ற சொல் வந்தது. கிரேக்க மொழியில் இதற்கு இச்சையுடன் கூடிய எழுச்சி என்று பொருள்.
உடலுறவில் உச்சக்கட்டப் பரவசம் (ஆர்கஸம்) உச்சக்கட்டப் பரவசம் என்பதை பாலுறவு இன்பத்தின் மனதின் செயல்களெல்லாம் மூளையில்தான் தோன்றுகின்றன என மூளைக் கோட்பாடு கூறுகிறது. "இரு உடல்கள் அருகே ஒன்றிணைந்து இயங்கும்போது மனம் மற்றும் உடல் ரீதியான தூண்டுதல்கள் ஏற்பட்டு, மூளை மூலம் ஏற்படும் நரம்பு சதை (நியூரோமஸ்குலர்) எதிர்வினை (அதாவது இன்பமான புலனுணர்வின் உச்சக்கட்டம்) தான் உச்சக் கட்டப் பரவசம் என்பது.
உச்சக்கட்டப் பரவசம் ஏன்?
உடலுறவு என்பது வெறும் பிள்ளை பெற்றுக் கொள்வதற்கான செயல்பாடு மட்டுமல்ல. இன்பம் என்ற உணர்வே இதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்பம் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய இரு செயல்களும் நிகழ வேண்டும் என்ற அடிப்படையிலேயே இயற்கை மனித உடலமைப்பை உருவாக்கியிருக்கிறது.
ஒருவர் எப்படி உச்சக்கட்டப் பரவசத்தை அடைகிறார்?
உடலுறவில் ஆர்வத்தில் கிளர்ந்தெழும் ஒருவர், சாதாரண நிலையில் இருந்து காமவெறி நிலைக்குப் போகிறார். இது காம உணர்த்தல் (Sexual Grounding அல்லது Sexual State) என்றழைக்கப்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டவுடன் மன உடல் ரீதியான உணர்வுகள் மூளையில் உள்ள காம மையத்தில் தூண்டப்படுகின்றன. இதுவும் இன்பம் தரும் நிலைதான். ஆணுக்கு விரைப்புத் தன்மையும் பெண்ணுக்கு பெண்ணுறுப்பில் வழுவழுப்பான திரவம் சுரப்பதும் அப்போது நடைபெறுகிறது. இதற்குக் காரணம் இயல்புக்கு மீறி இரத்தம் ஒரே திசையில் திரள்வதுதான். இதைத் தொடர்ந்து உறவின் தொடர்ச்சியான முயக்கத்தின் போது உச்சக்கட்டப் பரவசம் உண்டாகிறது.
சிலர் உச்சக்கட்டப் பரவசத்தை அடையாமைக்கு என்ன காரணம்?
போதைப் பொருளைப் பயன்படுத்துதல் (குறிப்பாக பிரௌன் சுகர்), மது அருந்துதல், நரம்புக் கோளாறு, கவலை, அக்கறையின்மை, பரபரப்பு ஆகியவை உச்சக்கட்டப் பரவசத்துக்கு எதிரிகள்.
உச்சக்கட்டப் பரவசத்தை எப்படி வர்ணிக்கிறார்கள்?
 ஒவ்வொரு இனமும் இதைப் பலவாறு வர்ணிக்கிறார் கள். ஆனால், அனைவருமே இதை உச்சக்கட்ட இன்பம் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். "இது போதும், இதற்கு மேல் வேண்டாம்" என்ற நிலையில் இருக்கின்றனர். 
தமிழர்கள் இந்த உச்சக்கட்டப் பரவசத்தை, திருப்தி (Satisfaction) என்று வர்ணிக்கிறார்கள். குஜராத்திகள் சுக் (Happiness) என்றும், இந்திக்காரர்கள் சந்தோஷ் (Satisfaction) என்றும், போக்ரா இனத்தவர் ப்ரம்சுக் (Eternal Happiness) என்றும், மராத்தியர்கள் சமதான் (Satisfaction) என்றும், உருதுக்காரர்கள் சுகன் (Perfect Satisfaction) என்றும், சிந்திக்காரர்கள் சாந்தி (Peace) என்றும், தெலுங்கர்கள் சாந்திருப்தி (Perfect Satisfacion) என்றும் காஷ்மீரிகள் குஷி (Ecstasy) என்றும், ஆங்கிலேயர்கள் உச்சக்கட்டம் (Climax) என்றும் கூறுகின்றனர். தங்கள் சமூக கலாச்சார மொழியின் பின்புலத்திற் கேற்ப, தங்கள் எண்ணத்தை உச்சக்கட்டப் பரவச அனுப வத்தை ஒரே வார்த்தையில் வடித்துள்ளனர்.
உச்சக்கட்டப் பரவசம் அடைவதை எப்படி உணர்வது?
இதை விளக்குவது கடினம். ஒருமுறை அடைந்த பிறகுதான் அதை உணர முடியும். உச்சக்கட்டப் பரவசங்கள் மாறுபடக் கூடியவை. பெண்ணுறுப்பில் ஏற்படும் உயர்ந்த பட்ச இன்பச் செறிவு அல்லது ஆணின் விந்து வெளிப் பாட்டை தொடர்ந்து ஒரு தளர்வு நிலை என்று இதைக் கூறலாம்.
ஒருவர் உச்சக்கட்டப் பரவசம் அடைந்ததன் அறிகுறிகள் என்ன?
உச்சக்கட்டப் பரவசம் அடையும்போது சிலர் இன்ப முனகல்களை வெளிப்படுத்தக் கூடும். அல்லது உடல் ரீதியாக இறுகப் பற்றிக் கொள்ளக்கூடும். பரவச நிலையை அடைந்தவுடன் அமைதியாகவும், உடல் ரீதியில் திருப்தி யுடனும் காணப்படுவர். இந்தப்பரவசஅனுபவம் கண நேரத்தில்தில் தோன்றி மறைகிறது. உங்கள்துணையைக் கேட்டறிதலே சிறந்த முறை.
மதனபீடத்தைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டப் பரவசத்தை அடைய முடியுமா?
நிச்சயமாக. உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடைய முடியாத பெண்கள் மதனபீடத்தை சுயமாகவோ, ஆணின் முயற்சியாலோ தூண்டி இன்பம் பெற வேண்டும்.
உடலுறவு உறுப்புக்கள் தவிர பரவசநிலையை அடைய உடலின் வேறு உறுப்புக்களும் முக்கியமானவையா?
உடலில் எத்தனையோ இன்பப் பகுதிகள் உள்ளன. அதில் எதை வேண்டுமானாலும் தூண்டலாம். உச்சக்கட்டம் தான் முக்கியமே தவிர, அதை அடைய முறையான வழிகள் என்று எதுவும் இல்லை.
உடலுறவின் போதுதான் ஒரு பெண் உச்சக்கட்டப் பரவசத்தை அடைய வேண்டுமா?
இல்லை. உடலுறவின் போது மட்டும்தான் பரவசநிலை ஏற்படுகிறது என்பது தவறான கருத்து. உறவின் போதான முன் விளையாட்டுக்களின் போது கூட மதனபீடத்தைத் தூண்டுவதன் மூலம் பரவச நிலையை அடையலாம். இதில் திருப்தி என்பதுதான் முக்கியம்.
உச்சக்கட்டப் பரவசத்தை அடைய உறுப்புத் தூண்டுதல்கள் அவசியமா?
இல்லை. பெண்ணின் உடற்கூறில் பல இன்பப் பகுதிகள் உள்ளன என்று ஏற்கனவே கூறினேன். அதில் ஏதாவது ஒன்றுகூட, அவளை உச்சக்கட்டதுக்கு அழைத்துச்செல்லும். மார்புக் காம்புகளைத் தூண்டினால்கூட சிலர் உச்சக்கட்டப் பரவச நிலையை அடைந்து விடுவர்.
பலமுறை உச்சக்கட்டம் என்றால் என்ன?
இதனை தொடர் பரவசம் (மல்டி ஆர்கஸம்) என்கிறார்கள். ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று என அடுத்தடுத்து உச்சக் கட்டப் பரவசங்கள் ஏற்படுவதையே தொடர் பரவசம் என்கிறோம்.
ஆண்களுக்கு 'பலமுறை உச்சக்கட்டம் உண்டா?
இல்லை. பொதுவாக, ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்த பிறகு, மீண்டும் விரைப்புத் தன்மை ஏற்பட்டு, உறவில் ஈடுபட சிறிது நேர இடைவெளி தேவைப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு பலமுறை உச்சக்கட்ட பரவசநிலை இயல்பாகவே அமைந்துள்ளது. அவர்களால் உடனுக்குடன் உச்சக்கட்டப் பரவச நிலையை பலமுறை அடைய முடியும்.
உடலுறவில்  இடைவிளையாட்டு (Interplay) என்றால் என்ன?
உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கிடையில் ஏற்படும் முழு செயல்திறன் இயக்கங்களும், உணர்ச்சிகளும்  இடைவிளையாட்டு எனப்படுகிறது.
உடலுறவின் போது முன்விளையாட்டு (Foreplay) அவசியமா?
ஆமாம். நிச்சயமாக. இது வேட்கையைத் தூண்டி இடைவிளையாட்டுக்கு நல்லதொரு தொடக்கத்தை உருவாக்கித் தருகிறது. சரியான அளவு முன்விளையாட்டு இருக்கும்போது, நல்ல எழுச்சியும், பாலியல் ஒத்தியல்பும் உண்டாகிறது.
உறவின் போது பின்விளையாட்டு (Afterplay) தேவையா?
தேவைதான். முன்விளையாட்டைப் போல பின்விளை யாட்டும் அவசியமானது. பாலுறவின் போது, உறுப்புக்கள் இணைந்து செயல்படும் உறவே திருப்திகரமானதாகவும், முக்கியமானதாகவும் கருதப்பட்டு வருகிறது. எனினும், அது: எப்போதும் உண்மையல்ல. “உச்சக்கட்டப் பரவசம் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அது முடிந்த பிறகும் கூட கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்தால் எனக்கு இன்பமாக இருக்கிறது " என்று கூறும் பல பெண்களை நான் கண்டிருக்கிறேன் என்கிறார் ஒரு பாலியல் நிபுணர். வாத்சாயனரும் தனது காமசூத்ராவில் முன்விளையாட்டைப் போல, பின்விளையாட்டும் சம அளவு முக்கியமானது என்கிறார். அணைத்துக் கொண்டிருப்பதை, பிடித்துக் கொண்டிருப்பதை, கிசுகிசுத்துக் கொண்டிருப்பதைக் கூட உறவு முடிந்த பின்பும் பலர் விரும்புகின்றனர். எளிதில் விரைப்புத் தன்மையை அடைய இயலாதோர் முன் - பின் விளையாட்டுக்களில் கவனம் செலுத்த வேண்டும். இது எந்திர ரீதியான பாலுறவில் இருந்து விடுபட வழிவகுக்கும்.
உடலுறவில் 'பொதுவான கால அளவு எவ்வளவு நேரம்?
இதற்கெல்லாம் பொதுவான கால அளவு கிடையாது. இது தம்பதிகளைப் பொறுத்த விஷயம். இருவரும் திருப்தி அடையும் வரையில் பாலுறவு நிகழ வேண்டும். நீண்டநேர உறவு அதிக இன்பம் தரும் என்பது உண்மையல்ல. எவ்வளவு நேரம் என்பதும் முக்கியமல்ல. எவ்வளவு இன்பம் என்பதே முக்கியம்.
உடலுறவை எந்தளவுக்கு அடிக்கடி வைத்துக் கொள்ளலாம்?
பாலுறவு என்பது இன்பத்தை எல்லையாகக் கொண்டது. எவ்வளவுக்கெவ்வளவு அவர்களுக்கு இன்பம் துய்க்க விருப்பமோ, அவ்வளவுக்கு 'அடிக்கடி அவர்கள் உறவில் ஈடுபடலாம். அடிக்கடி, அவ்வப்போது, வாரமொரு முறை, மாதமிருமுறை என்பதெல்லாம் தம்பதியரைப் பொறுத்து மாறுபடுகிறது. எத்தனை முறை என்ற கணக்கு களை மறந்துவிட்டு, இருவருக்கும் இன்பமும், திருப்தியும் கிடைக்கும் வகையில் உறவில் ஈடுபடுங்கள். இதில் இன்பமும் விருப்பமும் தான் முக்கியமே தவிர எண்ணிக்கை அல்ல.
உறுப்புக்கள் இணைந்து செயல்படாமல், பாலுறவில் இன்பம் கிட்டுமா?
நிச்சயமாக. பாலுறவு என்பது ஆண் பெண் உறுப்புக்களின் இணைந்த செயல்பாடு மட்டும் அல்ல. அதில் முழு உடலுக்கும் பங்குண்டு. பாலுறுப்புக்களின் செயல்பாடு என்பது அதில் ஒரு பகுதிதான்.
புரியவில்லை, எப்படி?
உங்கள் துணைவரோடு உங்கள் விருப்பு, வெறுப்புக்களைப் பற்றி தெளிவாகப் பேசிவிட வேண்டும். இருவருக்கும் விருப்பமானவை எவை (உ-ம். முன் விளையாட்டு,உறுப்புக்கள் இணைதல்) என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். ஒருவருக்கு மற்றவரின் உடலை முழுக்க ஆய்ந்தறிவதில் மோகம் இருக்கக்கூடும். பெண்ணின் மார்புக் காம்புகளை ஆண் சுவைப்பதை சில பெண்கள் விரும்பலாம், வேறு சிலர் ஆணின் மார்புக் காம்புகளைச் சுவைப்பதில் அதிக இன்பம் பெறலாம். துணைவரின் உறுப்பைப் பிடித்துக் கொண்டிருப்பதை, வருடுவதை இன்பம் பெறும் செயலாகக் கருதலாம். பெண் முதலில் தயக்கம் காட்டினாலும், ஆண் அவளிடம் பேசி, அவளுக்கு எதில் இன்பம் கிடைக்கிறது என்றறிய வேண்டும்.
இதற்கு உராய்வுப் பொருட்கள் சில வேளைகளில் பயன்படக்கூடும். வாய்வழிப் உடலுறவில்  அதிகத் தூண்டுதல் ஏற்படுத்தக் கூடியதாகவும், திருப்தி தரக் கூடியதாகவும் இருக்கலாம். உறுப்புகளுக்கிடையிலான உறவு என்பது இரு தொடைகளுக்குள் முடிந்து விடுகிறது. உடலுறவு என்பது உடல் முழுவதும் இயங்குகிறது.
பெண்ணுறுப்பினுள் ஆணுறுப்பு நுழைந்து விட்டதை எப்படி அறிவது?
உடற்கூறியல் படி, பெண்ணுக்கு மூத்திரைப்புழை, யோனி, குதம் என்ற மூன்று திறப்புகள் உள்ளன. மூத்திரைப்புழை மிகவும் சிறியது. உங்கள் சுண்டு விரலைக்கூட அதில் நுழைக்க முடியாது. குதம் மிகக் கீழே உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் ஒரு இடம்தான் யோனி. புதிதாகத் திருமணம் செய்து கொண்டோருக்குக் கூறுவது இதுதான்: முன்விளையாட்டு முடிந்த பிறகு நல்ல விரைப்புத் தன்மை ஏற்பட்ட பிறகு, அதை உங்கள் மனைவியிடம் விட்டுவிடுங்கள். அவளுக்குத் தெரியும் - சரியான இடம் எதுவென்று. பெண்ணால்தான் அவள் உடற்கூறைப் பற்றி நன்கு அறிந்திருக்க முடியும்.
சில பெண்களால் உடலுறவின் போது உச்சக்கட்டப் பரவசத்தை அடைய முடிவதில்லை, ஏன்?
போதுமான அளவு முன்விளையாட்டில் ஈடுபடாமை, ஆர்வமின்மை,ஆண்உறுப்பின் செயல்பாட்டுக்காக அவசரப் படுத்துதல், பெண்ணின் அதிகக் கூச்சம், தன்னுடைய தேவையை உணர்த்தாமை, கணவன் மட்டும் இன்பம் அடைந்தாலே போதும் என்ற எண்ணம் ஆகியவை பெண்ணின் உச்சக்கட்டப் பரவசத்துக்கு எதிரிகள். மேலும் போதை மருந்து, குற்ற உணர்வு, பதட்டம், கவலை, சோர்வு தளர்ந்த தொடை எலும்பு தசைகள் ஆகியவையும் உச்ச கட்டப் பரவசம் ஏற்படாமல் தடுப்பவையே.
உடலுறவின் போது பெண் உறுப்பில் வலி ஏற்படக் காரணம் என்ன?
பொதுவாக, பெண் முறையான அளவில் வேட்கை அடையாத பட்சத்தில் உராய்வுத் திரவம் சுரந்திருக்காது. அப்போது ஆணின் உறுப்பை உள்ளே செலுத்துவதால் எரிச்சலும், வலியும் ஏற்படுகிறது. தற்காலிகமாக இந்த வலி ஏற்படுமானால், நோய்த் தொற்று அல்லது ஒவ்வாமை காரணமாக இருக்கக்கூடும். அறுவைச் சிகிச்சை மேற் கொண்ட பின்னோ, கன்னித்திரை அடைப்பு காரணமாக வோ, சிறுநீரகக் குழாய் குறைபாடுகள் காரணமாகவோகூட வலி ஏற்படக்கூடும். தொடர்ந்து வலி ஏற்படும்போது மருத்துவரைப் பாருங்கள்.
உடலுறவிற்குப் பிறகு பெண்ணுக்கு வலி வரக் காரணம் என்ன?
பல ஆண்கள் தங்கள் இணையை தூக்க மாத்திரை போலக் கருதி உறவில் ஈடுபடுகின்றனர். தாங்கள் உச்சக் கட்டப் பரவசம் அடைந்தவுடனேயே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், தங்கள் துணைவியை பாதி வழியிலேயே விட்டுவிட்டு தூங்கி விடுகின்றனர். உடலுறவினால் பெண்ணின் இடுப்பெலும்புப் பகுதியில் மட்டு மீறி ஓரிடத்திலேயே குவிக்கப்பட்ட அழுத்தம், உடனே விடுபடுவதில்லை. இதனால் அடிவயிற்றில் நீடித்த வலியோ, தொடர்ச்சியான கீழ் முதுகுவலியோ ஏற்படுகிறது.
உடலுறவின் போது ஆணுறுப்பு பெண்ணின் கருப்பை வாயை (Cervix) தொட்டால்தான் பெண்ணுக்கு இன்பம் கிடைக்குமா?
இல்லை. இது ஒரு தவறான கருத்து. பெண் வேட்கை அடைந்தவுடன் அவளுடைய கருப்பை சற்று மேலே தூக்கிக் கொள்கிறது. ஆணுறுப்பு தொடுவது இடுப்புக் குழி மூட்டு முக்கோண எலும்பையே (Sacrum) தவிர, கருப்பை வாயை அல்ல.
வித்தியாசமான உடலுறவு நிலைகள் உள்ளனவா? 
ஆமாம். மனித உடல், பல வகையான பாலுறவு நிலை செயல்பாடுகளுக்கு வாய்ப்பளிக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட விருப்பம், சாத்தியம் ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நிலைகளில் ஈடுபட்டு இன்பம் பெறலாம்.
பல நிலைகளில் உறவு கொள்வது பயன் தருமா? 
ஆமாம். ஒவ்வொரு பாலுறவு நிலைக்கும் பலவிதமான பயன்கள் உண்டு. புதுமை என்பது பொதுவான பயன். பெண் மேலிருந்து இயங்கும் நிலையில், விரைவில் ஆண் உச்சக் கட்டத்தை அடைவதைத் தடுக்க முடிகிறது. மேலும், பதட்டத்தினால் விந்து உடனடியாக வெளியேறுவதையும் இதனால் தவிர்க்க முடியும். பக்கவாட்டில், பின்புறத்தில் இருந்து, ஆணுக்கு மேலாகப் பெண் ஆகிய நிலைகள் கர்ப்பிணிகளுக்கு உகந்தவை. 
பெண் மேலிருந்து இயங்கும் நிலையை பெண்கள் விரும்புகிறார்களா?
ஆமாம். இது பெண்களின் வேட்கையை அதிக அளவில் தூண்டுகிறது. மதனபீடத்தை நேரடியாக ஆணுறுப்பு உராய்வதால் எளிதாக இயங்க முடிகிறது. 500 பெண்களை ஆய்வு செய்ததில் 74 சதம் பேர் மேலிருந்து இயங்கும் நிலையை விரும்புகின்றனர் எனத் தெரிய வந்தது. மேலும், பெண்ணும் பாலுறவில் முக்கியப் பங்காற்றுவதாக நினைக்கும் நிலை இதில் உள்ளதாலும் வேட்கை, ஆர்வம் அதிகரிக்கிறது.
சிலருக்கு உடலுறவில் வேட்கை அளவுக்கதிகமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்?
'அளவுக்கதிகம்' என்பதை இந்த இடத்தில் சரிவர நிர்ணயிக்க வேண்டும். நம் பண்பாட்டின்படி ஆண்களின் வேட்கை ஆண்மைக்கு அடையாளமாகவும், பெண்களின் வேட்கை ஒரு கறையாகவும், பாவமாகவும் கருதப்படுகிறது. சில மனவியல் நோயாளிகளுக்கும், உறுப்பில் பிரச்சினை உள்ள சில நோயாளிகளுக்கும் வேட்கை தற்காலிகமாக அளவுக்கதிகமாக இருக்கக்கூடும்.
கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா?
தன்னைவிட வயது அதிகமான பெண்ணுடன் பாலுறவு வைத்துக் கொண்டால் தீங்கு விளையும் என்பது உண்மையா?
இது கடைந்தெடுத்த பொய்யாகும். இதில் எள்ளளவும் உண்மையில்லை. பாலுறவுக்கு வயதோ, நிறமோ, அழகோ எதுவுமே தடையில்லை. இருந்தும், இளமையாகத் தோற்றமளிக்கும் பெண்ணைப் பார்க்கும்போது இயல் பாகவே ஆணுக்கு மோகம் உண்டாகும் என்பது உண்மை. இதைத் தவிர தன்னைவிட வயது அதிகமான பெண்ணுடன் கூடினால் தீங்கு ஏற்படும் என்பது கற்பனையாகும்.
உடலுறவில் அடிக்கடி ஈடுபட்டால் உடல் மெலிந்து விடுமா?
நீங்கள் விரும்பும் போதெல்லாம் உறவு கொள்ளலாம் என்பது தான் உண்மை. இதனால் உடல் எந்தக் காலத்திலும் மெலியாது. பாலுறவின் மூலம் உடல் சுறுசுறுப்படையும். எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்வீர்கள். வேலைகளில் மன ஊசலாட்டம் உங்களுக்கு இருக்காது.
வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்துவிடும் என்பது உண்மையா? இல்லை. செக்ஸ் பற்றி நிலவும் தவறான கருத்துகளில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள்.
அமெரிக்காவில் செக்ஸ் தெரபி அன்ட் ரிசர்ச் சொசைடி யைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்: நடு வயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் உடலுறவு ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை. இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும் விட இந்த வயதில் தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள். இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால், முன்னெப்போதையும் விட இந்த வயதில் தான் தாம்பத்ய சுகத்தை பூரணமாக உணர்கிறோம் என்கிறார்களாம் இவர்கள்.பெண்களுக்கு 50 வயதை நெருங்கும் போது மாத விலக்கு முற்றிலுமாக நின்றுபோய் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிலக்கு நிற்கப் போவதற்கான அறிகுறிகள் தோன்றி, மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும்.
இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும், மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும் போது கூட பெண் உறுப்பில் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத்தனமாக உறவு கொண்டால் இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க எண்ணெய்யோ அல்லது இதற்காகவே விற்பனையில் இருக்கும் திரவங்களையோ  பயன்படுத்தலாம்.
40-50 வயதுகளில் ஆண்களின் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. அவர்கள் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ் டிரான் இயக்குநீர் மோகத்தின் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. 20 - 30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும். இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டிரான் 25% அளவுக்குக் குறைந்துவிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் உடலுறவில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம். என்றாலும் அதில் ஈடுபடும் போது கிடைக்கும் சுகத்தில் எந்தக் குறைவும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக் கல்லூரி ஆய்வுகள் சொல்கின்றன.
60-70 சதவீத விரைப்புத் தன்மை கூட உறவை அனுபவிக்கப் போதுமானது. இது பற்றி டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள்:
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக காமம் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கி விடும் மத்தாப்பு போன்றது அது. 20 களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்தி லிருந்து 3 நிமிடத்திற்குள் உச்சக்கட்ட இன்பத்தைத் தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.ஆனால், நடுத்தர வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக் குறைவாகவே உச்சக்கட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்த நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது. மனைவியை சிலிர்ப்பு நிலைக்குக் கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.
2. கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத் திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்த நிலைக்குத் தூண்ட முடியும். எனவேதான், இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.
3. இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறான். ஆனால், நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் (Estrogen) மற்றும் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) இயக்குநீர்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால், பெண் உடலில் டெஸ்டோஸ்டிரானின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.
4. வயது அதிகமாக அதிகமாக கூச்சம் அகலுகிறது. அனுபவங்கள் உதவுகின்றன. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பக்குவமும் கைகொடுக்கிறது. அதனால் உறவின் போது தயக்கமின்றி புதிய புதிய உத்திகளைக் கையாளத் தோன்றும். செக்கு மாடுகள் போல் யந்திரத்தனமாக இயங்காமல் புதுமைகளை விரும்புவது உடலுறவில் மிக அவசியமானது. உடலுறவு மட்டும்தான் முக்கியம் என்பதல்ல, அதற்கு முன்னும் பின்னும் கொஞ்சல்களும், விளையாட்டும் அதை விட முக்கியம்.
5.சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 30வயதுடையவர்களில் 50% பேர் வாரம் 3 முறையும் 11% பேர் வரம் 4 முறையும், அதற்கு மேலும் உறவு கொள்கிறார்கள். 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30% பேர் மட்டுமே வாரம் 3 முறை உறவு கொள்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் 40 வயதுடையவர்களே உடல் ரீதியாகவும் பூர்வமாகவும் திருப்தியடைந்திருக்கிறார்களாம். உணர்ச்சி உறவில் அதிக முறை ஈடுபடுவதல்ல முக்கியம். அதிக திருப்தி அடைவதே முக்கியமானது. அதிக நாட்கள் இடைவெளியின் பிறகு உறவு கொள்வதும் பின் அதற்காக காத்திருப்பதும் ஆர்வத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்கவே செய்யும்.
நடுத்தர வயது தம்பதிகள் தங்கள் உடல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாகச் செயல்பட வேண்டும். அப்படியில்லாத போது தான் முரண்பாடு ஏற்பட்டு வீட்டிற்கு வெளியே இணை தேடும் முறைகேடுகள் நடக்கின்றன. புரிந்து கொண்டு செயல்பட்டால் எப்போதையும் விட நடுத்தர வயதில்தான் உடலுறவு திருப்திகரமாக இருக்கிறது.

  
  
24th ஆகஸ்ட் 1995 தேதி இலங்கையில் இலவச மருத்துவ முகாம் நடத்துவதற்காக அமைச்சர் மாண்புமிகு தோண்டமான்  அழைப்பில் நானும் Dr.ராஜ்குமார் MS,FRCS(London) அவர்களும் சென்றோம்.
எனது மருத்துவ தொண்டினைப் பாராட்டி எஸ்.எம். முருகேசன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,பொகவந்தலாது. உடனே ஒரு கவிதையை வடித்து தந்தார். அக்கவிதை பின்வருமாறு:-

“குறை தீர்த்த குமரேசன்
குன்று மலை மன்னன் மக்கள்
குறை தனை கண்டறிந்து
கோட்டகலை நகர்தனிலே கேம்பொன்டை (வைத்தியம்) ஆரம்பித்தார்
காது மூக்கு தொண்டை நோய் 
கனகாலம் தாங்காது 
கஷ்டப்பட்ட மக்களும் குறை தீர்த்த குமரேசன்
இன்று மட்டும் மல்ல
என்றும் நீர் இளமையுடன்
தான் வாழ்வீர்!”

ஈழத்துத் கவிதைகள் உணர்ச்சிமயமாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம். ஆகவே அவருடைய கவிதையை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன்.
"சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்"
“கான மழை காண மண்ணில் பாறைபிளந்து பயன் விளைப்பன் என் ஊரான்''
இவ்வாறு புரட்சி பாக்களை எழுதியவர்கள் ஈழத்து தமிழர்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். தமிழ் புலவர் எஸ்.எம். முருகேசன் எனது மருத்துவ ஆய்வு பற்றி நன்கு தெரிந்து கொண்டார்.  தினமும் பல தமிழ் பழைய மருத்துவ நூல்களை கொண்டு வந்தார்.அவைகள் எல்லாம் மருத்துவ கருவூலங்கள். 
அவர் சேகரித்து வைத்திருந்த அரிய கோக்கோகம் பிரதிகளை ஆதாரமாகக்கொண்டு இதனைத் தொகுத்துள்ளேன். கோக்கோகம் அல்லது இன்பவிளக்க நூல் என்பது அதிவீரராம பாண்டியர் என்பவர் சமசுகிருத நூலை மொழிபெயர்த்து தமிழில் எழுதிய ஒரு பாலியல் நூல் ஆகும். பாலியல் தொடர்பாக தமிழில் எழுந்த முதல் நூல்களுள் இதுவும் ஒன்றாகும்.

Greetungs by Shri.SEVALIER SHRI.SANTHOSAM ANNACHI

புதிய புதகம்

பகுதிIII    கீச்சுக்குரல் மாற்றத்தின் நன்மைகள். 
எங்கள் சிகிச்சை ; கீச்சுக்குரல் உள்ளவரின் ஆளுமையையும் மேம்படுத்துகிறது. 
   எங்கள் சிகிச்சை முற்றிலும் புதியது மற்றும் வழக்கமான முறைகளிலிருந்து வேறுபட்டது. 
கம்பிரமாக பேசுதல்,பாடுதல்,  குரல்  அதிகரித்த ஆற்றல்,  மேம்பட்ட மனநிலை,  உந்துதல் அதிகரிப்பு,  தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகரிக்கும்,
  அதிக மன உறுதி,  அதிக கவனம் மற்றும் மன தெளிவு,  மேம்பட்ட படைப்பாற்றல்,  மேம்பட்ட சுய விழிப்புணர்வு,  டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பு (ஆண்களுக்கு),  சிறந்த சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம்,  ஆழ்ந்த தியானங்கள் மேம்படும்.  
பிறக்கும் போதிலிருந்தே மகரக்கட்டு மாந்தருக்கு பாலியல்  பிரச்சனைகள் இல்லை. குறை இருப்பதாக தாங்களே எண்ணிக்கொள்கிறார்கள்.
மனித ஆசைகளில் பாலியல் ஆசை மிகவும் சக்தி வாய்ந்தது. கீச்சுக்குரல் மாறிய பின்/ ஆண்கம்பீரக்குரல் தன்மையுடைவர்களாக மாறி சாதாரணமானவர் மேதையாக மாறு கிறார்கள். கீச்சுக்குரல் மாறிய பின் பாலியல்  சக்தி அதிகரிக்கிறது.
இந்த சக்தி  உந்தப்படும் போது, ஆண்கள் கற்பனைத்திறன், தைரியம், விருப்பம், விடாமுயற்சி மற்றும் பிற நேரங்களில் அவர்களுக்குத் தெரியாத படைப்பு திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்கிறார்கள். பாலியல் தொடர்புக்கான ஆசை மிகவும் வலுவானது மற்றும் தூண்டுகிறது, ஆண்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். நற்பெயரை பெற உயிரையும் தியாகம் பண்ணக்கூடிய அளவுக்கு ஆபத்தில் ஈடுபடுகிறார்கள். பாலியல் ஆற்றல் சக்தி வழிகளில் பயன்படுத்தப்பட்டு, திசைதிருப்பப்படும் போது, இந்த ஊக்கமூட்டும் சக்தியானது அனைத்து பண்புகளையும் பராமரிக்கிறது, அவை இலக்கியம், கலை அல்லது வேறு எந்த தொழில் அல்லது அழைப்பிலும் சக்திவாய்ந்த படைப்பு சக்திகளாகப் பயன்படுத்தப்படலாம். நிச்சயமாக, செல்வங்களின் சேமிப்பு அதிகமாகிறது.
குரல் ஆற்றலின் மாற்றமானது விருப்பத்தை செயல்படுத்துவதற்கு அழைப்பு விடுகிறது, நிச்சயமாக, அதனால் கிடைக்கும் வெகுமதி மதிப்புள்ளது. பாலியல் வெளிப்பாட்டிற்கான ஆசை உள்ளார்ந்த மற்றும் இயற்கையானது. ஒரு நதி அ டைக்கட்டப்பட்டிருக்கலாம், அதன் நீர் சிறிது காலத்திற்கு கட்டுப்படுத்தப்படலாம், ஆனால் இறுதியில், அது வெளியேறும். பாலுறவு உணர்ச்சியும் அப்படித்தான். இது ஒரு காலத்திற்கு கீச்சுக்குரலால் நீரில் மூழ்கி கட்டுப்படுத்தப்படலாம், ஆனால் அதன் இயல்பே அது எப்போதும் வெளிப்பாட்டின் வழிகளைத் தேடுகிறது. சில வகையான ஆக்கப்பூர்வமான முயற்சியின் மூலம் கீச்சுக்குரல் மாறிய பின்/ ஆண்கம்பீரக்குரல் தன்மையுடைவர்களாக மாறியபின் பாலியல் உணர்ச்சிகளை எவ்வாறு வெளிக்கொணர்வது என்பதை தானாகக் கண்டுபிடிப்பர், அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் அவர் அந்த கண்டுபிடிப்பின் மூலம் தன்னை ஒரு மேதையின் நிலைக்கு உயர்கிறார்.
1.சிறந்த சாதனை படைத்த ஆண்கள் மிகவும் வளர்ந்த பாலியல் கவர்ச்சியை க் கொண்ட ஆண்கள்; மற்றக் கலையைக் கற்ற ஆண்கள்.
2.இலக்கியம், கலை, தொழில், கட்டிடக்கலை, தொழில் என அனைத்திலும் பெரும் செல்வங்களைச் சேகரித்து சிறந்த அங்கீகாரம் பெற்ற ஆண்கள், பெண்ணின் செல்வாக்கினால் உந்தப்பட்டவர்கள்.
கீச்சுக்குரல் மாறிய பின்/ ஆண் கம்பீரக்குரல் தன்மையுடைவர்களாக மாறியபின் தயாராகவேண்டிய 21 புது பழக்கங்கள்:

1. பொறுப்பு: உங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கவும், உங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்கவும்.
2. மரியாதை:உங்களுக்கும் உங்களிடமிருந்து வேறுபட்டவர்கள் உட்பட மற்றவர்களுக்கும் மரியாதை காட்டுங்கள்.
 3. நேர்மை: உங்கள் வார்த்தைகளிலும் செயலிலும் நேர்மையாக இருங்கள்.
4. பச்சாதாபம்: மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் அனுபவங்களைப் புரிந்துகொண்டு தொடர்புபடுத்த முயற்சிக்கவும்.
5. சுய கட்டுப்பாடு: சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும் மற்றும் எதிர்மறை தூண்டுதல்களை எதிர்க்கவும்.
6. விடாமுயற்சி: கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள், விஷயங்கள் கடினமாக இருந்தாலும், கைவிடாதீர்கள்.
7. முன்முயற்சி: முன்முயற்சி எடுத்து உங்கள் இலக்குகள் மற்றும் பொறுப்புகளில் செயலில் ஈடுபடுங்கள்.
8. நேர மேலாண்மை: உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாகவும் திறமையாகவும் பயன்படுத்தவும்.
9. நல்ல தொடர்பு: மற்றவர்களுடன் தெளிவாகவும் திறமையாகவும் தொடர்பு கொள்ளுங்கள்.
10. சிக்கலைத் தீர்ப்பது: சவால்களை சமாளிக்க விமர்சன சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களைப் பயன்படுத்தவும்.
11. வளம்: விஷயங்களைச் செய்ய உங்கள் வளங்களையும் திறமைகளையும் திறம்பட பயன்படுத்தவும்.
12. சுதந்திரம்: சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
13. ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல்: குழுப்பணி மற்றும் மற்றவர்களுடன் ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை நெகிழ்வாகவும் மாற்றத்திற்கு ஏற்பவும் இருங்கள்.
16. தலைமை: தலைமைத்துவ திறன் மற்றும் பிறரை ஊக்குவிக்கும் மற்றும் வழிகாட்டும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
17. உணர்ச்சி நுண்ணறிவு: உங்கள் உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் உங்கள் சொந்த உணர்ச்சிகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொண்டு நிர்வகிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
18. நம்பிக்கை: உங்களையும் உங்கள் திறன்களையும் நம்புங்கள்.
19. தைரியம்:தைரியமாக இருங்கள் மற்றும் நீங்கள் நம்புவதை எதிர்த்து நிற்கவும்.
20. பணிவு:தாழ்மையுடன் இருங்கள் மற்றும் கற்றல் வளர்ச்சிக்கு வழி வகுதிறந்திருங்கள்.
21. நன்றியுணர்வு:நன்றியுணர்வைக் கடைப்பிடிக்கவும், உங்களிடம் உள்ளதைப் பாராட்டவும்.
உங்கள் வார்த்தைகளிலும் செயலிலும் நேர்மையாக இருங்கள்.

சிகிச்சைக்குப் பிறகு புதிய வளமான வாழ்க்கை வாழ பின் வரும் வழிகளை பின் பற்ற வேண்டும்.
1.தேவை கவனம்: ஒரு முறை முடிவெடுத்து இறங்கி விட்டால் அதன் பிறகு திரும்பிப்பார்க்க வேண்டிய அவசியமே இருக்க கூடாதுதானே.
நாம் இப்போது இருக்கும் நிலையை மாற்ற, நம்முன் பல வாய்ப்புகள் திறக்கிறது. இருக்கும் வாய்ப்புகளில் இருந்து நீங்கள் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்வதற்கே ஒரு குறிப்பிட்ட பயிற்சி தேவைப்படும்.  
2 உள்ளதை உள்ளபடி பாருங்கள்: எது வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறதோ, அதிலிருந்தே வேறொன்றை புதிதாக உருவாக்குவதற்கு தீர்க்கமான தொலைநோக்குப் பார்வையும், தைரியமும், உங்களுக்குள் இருந்தால்தான் முடியும். முற்றிலுமாக வேறொரு நிலையில் இருந்து வாழ்க்கையைப் பார்த்தால் மட்டுமே இது சாத்தியம். மற்றவர்களின் பார்வையில் புலப்படாத ஒன்றை காண்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.
3.ஒவ்வொரு கணமும்  இப்போது பிறந்த குழந்தையாக அனைத்தையும் உங்களால் பார்க்க முடிந்தால் எல்லாவற்றையுமே தெள்ளத்தெளிவாக நீங்கள் பார்க்கலாம். தெளிவான பார்வை இருக்கும்போது, வாழ்க்கை சூழ்நிலைகளை நீங்கள் சுலபமாக கடந்து செல்ல முடிகிறதுதானே.
4.இப்போது புதிதாக பிறந்த உயிராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு எதைப்பற்றியும் எந்த முன்முடிவும் இருக்காது. பிறந்த குழந்தையைப் போல நீங்களும் எல்லாவற்றையும் பார்க்க ஆர்வத்துடன் விருப்பமாக இருப்பீர்கள். பிறந்த பச்சிளம் குழந்தைகூட சில நாட்களில் தனக்கு தெரியும் என்று நினைக்க துவங்கி விடுகிறது. எனக்கு தெரியும் என்று நினைக்கத் துவங்கியதுமே வந்துவிடும்.
5.வாழ்க்கையை அதன் தன்மையில், எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பார்க்க முடிந்தால், வாழ்க்கையை கையாள தேவையான புத்திசாலித்தனம் செயல்படத் துவங்கும். வாழ்க்கையை அப்படியே அதன் தன்மையில் பார்க்க முடியாதபோது, உங்கள் புத்திசாலித்தனமே உங்களுக்காக செயல்படுகிறது.
எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பார்த்தால் மட்டுமே வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திலும் நீங்கள் வெற்றிகரமாக கடந்து செல்ல முடியும். நீங்கள் எதை வெற்றிகரமாகச் செய்ய விரும்பினாலும் அதற்கு உங்கள் தகுதி மட்டுமே போதும், ஒவ்வொன்றையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்ற தெளிவும் தேவை. அடிப்படையில், நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக இருக்கிறீர்கள் என்பது உங்களைச் சுற்றி இருக்கும் யதார்த்தங்களை நீங்கள் எந்த அளவுக்கு தெளிவாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.
6.வெற்றியின் திறவுகோல்:வாழ்க்கை மிக எளிமையானது. இங்கே பிறப்பது என்பது உங்கள் வேலை இல்லை. உங்களுக்காக இதை வேறு யாரோ செய்துவிட்டார்கள். உணவை உள்ளே அனுப்பியதும் உடல் வளர்ந்து விடுகிறது. மனதளவில் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க உங்களைச் சுற்றிலும் பல செயல்முறைகள் இருக்கிறது. எல்லா வாய்ப்புகளும் திறந்தே இருக்கிறது. எதுவுமே இங்கே மறைத்து வைக்கப்படவில்லை. 'வாழ்க்கை ஒரு புரியாத புதிர்' என்ற வாசகமே போலியானது, அப்படி எதுவும் இங்கே இல்லை. எல்லாமே திறந்தே இருக்கிறது. மக்கள் தங்கள் கண்களை கட்டிக்கொண்டு செல்வதால் எல்லாமே புதிராகத் தெரிகிறது.

கீச்சிக்குரல் குரல் மாறிய பின் வாழ்வில் முன்னேறும் வழி/குறிக்கோள்

1.ஒரு தொலைநோக்கு பார்வை - உங்கள் சிறந்த பதிப்பு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கற்பனை செய்து பாருங்கள். உங்களை கட்டுப்படுத்த வேண்டாம். அடக்கமாக இருக்காதீர்கள். நீங்கள் யாராக இருந்தாலும், உங்களுக்கு திறன் உள்ளது.
2.ஒரு திட்டத்தை உருவாக்கவும் - உங்கள் கனவுகளை நோக்கி செயல்படுத்தும் திட்டத்தை எழுதுங்கள். நாங்கள் அடிக்கடி பல்வேறு சவால்கள் மற்றும் சோதனைகளை எதிர்கொள்கிறோம், அதனால்தான் பாதையில் இருக்க வழிகளைக் கண்டறிய வேண்டும். நீங்கள் செய்யும் காரியங்களை ஏன் செய்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ள ஒவ்வொரு நாளும் திட்டத்தைச் சரிபார்க்க வேண்டும்.
நடவடிக்கை எடு - செயல் முடிவுகளைத் தருகிறது. இதுதான் முக்கியமானது மற்றும் இதுவே மிகவும் முக்கியமானது. யாரும் மற்றும் எதுவும் சரியானது அல்ல. காலப்போக்கில் விஷயங்கள் சிறப்பாகின்றன.
3. தவறுகளைச் செய்ய உங்களை அனுமதிக்கவும் - முழு பயணமும் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும் என்பதை நீங்கள் உணர வேண்டும். முன்னேறுவதற்கான ஒரே வழியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் தொடர்ந்து முன்னேறுவது தோல்வியடைவதுதான். இதுவே வளர்ச்சியைக் கொண்டுவருகிறது. பெரும்பாலான நேரங்களில் நமது தோல்விகளில் இருந்து நாம் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறோம்.
4.திறந்த மனதுடன் இருங்கள் - விஷயங்களை கருப்பு மற்றும் வெள்ளை கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். எல்லாவற்றையும் கேள்வி கேட்கவும், அனைவரையும் கேள்வி கேட்கவும்.
5.உங்கள் சொந்த வழியில் விஷயங்களைச் செய்யுங்கள் - எல்லாவற்றிற்கும் உங்கள் சொந்த அணுகுமுறையைக் கண்டுபிடித்து நீங்களே சிந்தியுங்கள். உங்கள் நம்பகத்தன்மையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இல்லாத ஒன்றாக இருக்க முயற்சிக்காதீர்கள்.
6.உங்கள் மீது கவனம் செலுத்துங்கள் - மற்றவர்களுடன் ஒப்பிடுவதை மறந்து விடுங்கள். உங்களைப் பற்றி மாற்றுவதற்கு உங்களிடம் போதுமான விஷயங்கள் உள்ளன. எளிமைப்படுத்துவது உங்கள் முன்னுரிமைகளை நேராக அமைக்க உதவுகிறது, மேலும் இது மிகவும் முக்கியமானது, குறிப்பாக நீங்கள் உங்களைப் பற்றிய சிறந்த பதிப்பாக மாற முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்களே ஒரு நண்பராக இருங்கள் - இந்த பயணத்தில், நீங்கள் எல்லா வகையான நபர்களையும் சமாளிக்க வேண்டும். அவர்களில் பலர் வெவ்வேறு காரணங்களுக்காக உங்கள் வழியில் நிற்க முயற்சிப்பார்கள்.
7.நேரத்தை வீணாக்காதீர்கள் - உங்களிடம் இருக்கும் மிக முக்கியமான ஆதாரம் நேரம். அதைப் பயன்படுத்த நீங்கள் முடிவு செய்யும் விதம் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். எல்லாம் இந்த காரணியைப் பொறுத்தது,அங்கீகரிக்கவும்.
14. படைப்பாற்றல்: புதிய யோசனைகள் மற்றும் தீர்வுகளைக் கொண்டு வர உங்கள் படைப்பாற்றல் மற்றும் கற்பனையைப் பயன்படுத்தவும்.
15. பொருந்தக்கூடிய தன்மை: 
பாலுறவு உணர்ச்சி என்பது ஒரு "தடுக்க முடியாத சக்தி", அதற்கு எதிராக எந்த எதிர்ப்பும் இருக்க முடியாது. இந்த உணர்ச்சியால் உந்தப்பட்டால், ஆண்கள் செயலுக்கான சூப்பர் சக்தியைப் பெற்றவர்களாக மாறுகிறார்கள். இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள், 
கீச்சுக்குரல் மாற்றம் ஒருவரை மேதை நிலைக்கு உயர்த்தும் என்ற கூற்றின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.
மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, கீச்சுக்குரல் மாற்றம் பாலின சுரப்பிகளை அழித்து, செயலின் முக்கிய மூலத்தை நீக்கிவி விடுகிறது. இதற்குச் சான்றாக, எந்த ஒரு மிருகமும் விதைக்காய் (காஸ்ட்ரேட் )செய்யப்பட்ட பிறகு அதற்கு என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். ஒரு காளை பாலியல் ரீதியாக மாற்றப்பட்ட பிறகு விதைக்காய் அகற்றியபின் பசுவைப் போல அடக்கமாகிறது. 
பாலின ஆற்றலை மாற்றுவது ஒருவரை மேதையின் நிலைக்கு உயர்த்தும் என்ற கூற்றுக்கு ஆதாரமாக இந்த ஒப்பீடு அவசியம். ஒரு மேதை என்றால் "ஆறாவது அறிவின்" உண்மை என்ன என்பதைக் கண்டுபிடிப்போம்.
ஆறாவது அறிவு "கிரியேட்டிவ் இமேஜினேஷன்". ஆக்கப்பூர்வமான கற்பனை ஆசிரியம் என்பது பெரும்பான்மையான மக்கள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தாத ஒன்றாகும், மேலும் பயன்படுத்தினால், அது பொதுவாக தற்செயலாக நடக்கும். ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள், சிந்தனை மற்றும் நோக்கத்துடன், படைப்பு கற்பனையின் பீடத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த பீடத்தை தானாக முன்வந்து, அதன் செயல்பாடுகளை புரிந்து கொண்டு பயன்படுத்துபவர்கள். புதிய கொள்கைகளின் அனைத்து கண்டுபிடிப்புகளும் படைப்பு கற்பனையின் பீடத்தின் மூலம் நடைபெறுகின்றன.ஆறாவது அறிவின் மூலம் சிறந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் கவிஞர்களாக மாறுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் படைப்பு கற்பனையின் மூலம் உள்ளிருந்து பேசும் "இன்னும் சிறிய குரலை" நம்பும் பழக்கத்தைப் பெறுகிறார்கள். கண்களை மூடிக்கொண்டு, படைப்புக் கற்பனைத் திறனை முழுவதுமாக நம்பத் தொடங்கும் வரை, மகத்துவத்தை அடையாத ஒரு  பேச்சாளராக இருக்கிறார். அவரது சொற்பொழிவின் உச்சக்கட்டத்திற்கு சற்று முன்பு அவர் ஏன் கண்களை மூடினார் என்று கேட்டதற்கு, அவர் பதிலளித்தார், "நான் அதை செய்கிறேன், ஏனென்றால், பின்னர் நான் உள்ளிருந்து எனக்கு வரும் யோசனைகள் மூலம் பேசுகிறேன்." இந்த ஆற்றல் வசீகரம் செய்யக்கூடிய காந்த குரல் வண்ணம் மூலம் மற்றவர்களுக்குத் தெரிவிக்கப்படலாம்:
கீச்சிக்குரல் மாறிய ஆண்களுக்கு பாலியல் ஆலோசனைகள் 

1. பாலியல் செயலைவிட ஒரு பெண்ணிடம் பேசுவது,அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிக முக்கியமானது.
 2.மனைவியிடம் உங்களின் அன்பைத் தெரிவியுங்கள். எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைக் கூறுங்கள். உள்ளார்ந்து அன்பைப் பொழியுங்கள். இதயத்தை அன்பால் வருடுங்கள்.
3. உங்கள் மனைவியிடம் பிடித்த விஷயங்களைத் தெரிவியுங்கள். அவளது மிருதுவான தோல், குரலின் இனிமை; அழகான இதழ்கள், கவர்ந்திழுக்கும் கண்கள், மெல்லிய புன்சிரிப்பு என உங்களை ஆக்கிரமிக்கும் உணர்வு களைக் குறிப்பிடுங்கள்.
4. பெண்களின் உணர்வுகள் இதயத்திலிருந்து இயக்கப் படுகிறது. அவர்களுக்கு 'காம உணர்வு வாழ்க்கையில் தனிப்பட்ட விஷயமில்லை. அவர்களின் மனம் இதமாக இருப்பது அவசியம். கணவன் படுக்கையறைக்கு வெளியே எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொறுத்துதான். படுக்கையறையின் மகிழ்ச்சியிருக்கும். மனைவியை கண்டுகொள்ளாமல் இருப்பது, அதிரப் பேசுவது, மோசமாக நடந்து கொள்வது ஆகியவை அவளைப் பாதிக்கும். அன்பும், நெருக்கமும் இருவருக்கும் இடையில் இருந்தால்தான் உடல் உறவும் இன்பமாக இருக்கும். வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும் கணவன், மனைவிக்கு வாங்கி வரும் பரிசுப் பொருட்கள் அவளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த மகிழ்ச்சி செக்ஸ் உறவை இரட்டிப்பாக்கும்.
5. பாலுறவு உறவில் உச்சக்கட்டம் என்பது ஒரு இன்பமான விஷயம். ஆனால், அது எப்பொழுது ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது. ஒரு ஆய்வுப்படி 60 சதவீதப் பெண்கள் மட்டும்தான் உறவில் உச்சக்கட்ட நிலையைத் தொட்டுள்ளார்கள். மனைவி உச்சக்கட்ட நிலையை அடைவதற்கு கணவன் உதவவேண்டும்.

6.உச்சக்கட்ட நிலையைத் தொட வேண்டும் என்ற ரீதியிலான உடல் உறவு என்பது ஒரு நதியின் அடுத்த கரைக்குச் செல்வதில் கவனம் இருப்பதைப் போன்றது. செல்லும் வழியில் உள்ள ரசிக்க வேண்டிய பல விஷயங்கள் அந்த பரபரப்பில் மறைக்கப்படும். பாலுறவு உறவில் ஏற்படும் உச்சக்கட்ட நிலையைவிட, உடல் ரீதியான நெருக்கம், உணர்வுகளின், உணர்ச்சிகளின் நெருக்கம் மற்றும் முன் விளையாட்டுக்களின் மூலமாக பெண்கள் உச்சத்தைத் தொடுவார்கள். 
7. பாலியல் உறவை சில ஆண்கள் 'கருமமே ண்ணாகக் கொண்டு மூர்க்கத்தனமாகச் செயல்படுவார்கள். ரசிப்பதை மறந்து விடுவார்கள். இவர்கள் காதல் வயப்பட்டு,  சின்னச் சின்ன சில்மிஷங்களைச் செய்யவேண்டும். உறவின் போது கலகலப்பாக இருப்பது அவசியம். மகிழ்ச்சியான மூடில் பழகுவது அதிக மகிழ்ச்சியைத் தரும். 
 
8. பெண்களுக்கு வெறும் பாலுறவு பின்னணியாகக் காண்ட தொடுதல்களைவிட பரிவான, இதமான தொடுதல், மெல்ல அணைப்பது, கைகளைப் பற்றிக் கொள்வது, முத்தமிடுதல் ஆகியவை மிக முக்கியமானவையாகும். பல பெண்கள், என் கணவர் படுக்கையறைதவிர மற்ற நேரங்களில் முத்தமிடுவதில்லை என்ற மனக்குறை உள்ளவர்களாக இருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் விருப்பமோ அப்பொழுதெல்லாம் ஒரு முத்தத்தைப் பரிசளியுங்கள்.
9.உங்கள் மனைவி, உங்களைத் தழுவி இதமாக, கழுத்து, தலையை வருடி விடுவது உங்களின் இதயத்தை எப்படி துள்ள வைக்கிறது! அதுபோலத்தான் உங்களின் நெருக்கமும் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமானது என்பதை மறந்துவிடாதீர்கள்.
10.உங்களின் உறவு இனிமையாக மாற, மனம் திறந்து பேசுங்கள். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள். இதமான, உணர்வு பூர்வமான விஷயங்கள் மகிழ்ச்சியை பல மடங்காக்கும்.
11. பல ஆண்கள் பாலுறவு உறவு வைத்துக் கொள்வது என்பது சாலையில் செல்லும் தெரிந்த நபரிடம், போகிற போக்கில் 'ஹலோ! எப்படி, வரட்டுமா" என்பது போல இருக்கிறது. பல ஆண்களின் உச்சக்கட்டம் முடிந்தவுடன் துவண்டு போய் சுருண்டு விடுகிறார்கள். உறவுக்குப் பின்னும் நெருக்கம் இருக்க வேண்டும்.

12.உறவின்பொழுது ஆண்களிடம் 'என்டார்பின் இயக்குநீர் அதிகரிக்கும். இதனால் உணர்ச்சிகளை ஆண்கள் உடனடியாகக் கொட்டித் தீர்த்து விடுவார்கள். பெண்களிடத்தில் இது மெதுவாக வேலை செய்யும். அதற்கு ஈடுகொடுத்து செயல்படவேண்டும். இந்த இணக்கமான போக்கு பெரிய மாற்றங்களைச் செய்யும். அப்போது உறவின் மகிழ்ச்சி எல்லையற்றதாக மாறும்.
13.திருமணத்திற்கு பின் சுய இன்பம்: திருமணத்திற்கு முந்திய தவறான பாலியல்  பழக்கங்களை  குரல் மாறியபின் மறந்து, மாற்றுவது நம் கடமை. இது நடக்கக்கூடிய இயல்பான விஷயம்தான். திருமணமான பின்பு மனைவி மாதவிலக்கில் இருக்கும் போதும், உடல்நிலை சரியில்லாமல் போகும்  செக்ஸ் ஆர்வம் அதிகரிக்கும் போதும் சுயஇன்பத்தில் ஈடுபடுகின்றனர்.

13.மண வாழ்க்கையில் சலிப்பு: அதே ஆண், அதே பெண் என்கிற உறவு தம்பதிகளுக்குள் ஒரு உற்சாகமின்மையை, சிலருக்கு சோர்வை ஏற்படுத்தும். இதை நீக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருசாராருக்கும் உண்டு. உடலுறவு சம்பந்தமாக பல புதிய விஷயங்களைப் பேசிக் கொள்வது, பல புதிய உடலுறவு அணுகுமுறைகளை மேற்கொள்வது இதை மாற்றப் பயன்படும்.
இதற்காக பல உடலுறவு சம்பந்தப்பட்ட புத்தகங்கள், படங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.காதல், செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் திரைப்படங்களைப் பார்க்கலாம். அடிக்கடி காதல் விளையாட்டுக்களில் ஈடுபடுவதென்பது, தம்பதிகளுக்குள் உடல் ரீதியான கிளர்ச்சியை உண்டு பண்ணும். காதல் விளையாட்டு திருமணத்துடன் முடிந்து போகும் விஷயமல்ல. தொடரும் விஷயம் அது. மென்மையான கிளர்ச்சியூட்டும் மனநிலையை மாற்றும். அடிக்கடி நறுமணத்தை மாற்றிக் கொண்டிருந்தாலும் ஒரு புதிய உணர்வு ஏற்படும்.

பிறந்தநாள், திருமண நாள் போன்றவற்றில் 'பரிசு' கொடுத்து, முத்தம் கொடுத்துக் கொள்வதன் மூலம், ஏதோ புதிய அறிமுகம் போன்ற உளவியல் மாற்றம் நிகழ்வதோடு நீங்கள் இன்னும் ஒருவருக்கொருவர் கவர்ச்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதும் வெளிப்படும்.

இதே நாட்களில் வித்தியாசமான உடை அணிந்து படுக்கைக்குச் செல்லலாம். எடுத்துக் காட்டாக, மனைவி கவர்ச்சியூட்டும் உடைகள் அணிந்து கொள்ளலாம். கணவன் விளையாட்டு உடைகள் அணிந்து கொள்ளலாம். படுக்கையில் மலர்தூவி, மீண்டும் மலரும் நினைவுகளைக் கொண்டு வரலாம். இதுபோன்ற செய்கைகளால் மணவாழ்க்கையில் ஏற்படும் சலிப்பைத் தவிர்த்து, இன்பமாக இருக்கலாம்.

14.வேலையும் பாலியலும்.

சிலருக்கு வேலை, தொழிலில் கிடைக்கும் மன நிறைவால் அதை மிகவும் நேசிக்கத் தொடங்கி விடுகின்ற னர். அதில் கிடைக்கும் சில வெற்றிகளும் அவர்களை உற்சாகப்படுத்தி அதிலேயே அதிக நாட்டம்  வைத்து விடுகின்றன. வீடு, மனைவி, குழந்தைகள் என்பது இரண்டாம் பட்சமாகி விடுகின்றன. இந்த நிலையால் அவர்கள் வேலை, தொழிலில் வெற்றியடைந்தாலும், மண வாழ்க்கையில் தோல்வியடைய நேரிடுகிறது. இதன் விளைவாக குடும்பத் தில் ஏற்படும் பிரச்சினைகளால் மனக்கவலையும் ஏற்படு கிறது.
அலுவலகத்தில் ஏற்படும் மனக்கவலை, கோபம், பிரச்சினை போன்றவற்றோடு உடல் உறவில் ஈடுபட்ட போது, சரியாக செயல்பட முடியாமல் போயிருக்கலாம். தன் கணவருக்கு இன்பம் ஏற்படுகிற அளவுக்கு தனக்கு கவர்ச்சியில்லையோ என்று வருத்தப்படுகிற பெண்களும் உண்டு.

ஒரு ஆணுக்கு உச்சக்கட்டம் ஏற்படுவதற்கும் அன்புக்கும் சம்பந்தமில்லை. அதிகப்படியான முன் விளையாட்டுகளுக்குப் பின்னால் உடலுறவுக்கு செல்வதால் உடனடி உச்சக்கட்டம் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின்னர் உடலுறவில் ஈடுபடும் போதும் உணர்ச்சி வேகத்தில் இவ்வாறு ஆகக்கூடும்.

அதிகமான களைப்பாலும், அந்த நேரத்தில் போது அளவிற்கு உடலுறவில் ஆர்வம் இல்லாததாலும் உச்சக்கட்டம் அடைய சிலருக்கு நேரமாகலாம்.

15.வெட்கப்படக் கூடிய செயல் என்ற எண்ணம்

இந்தியாவைப் பொறுத்தவரையில் பொதுவாக உள்ள செக்ஸ் பிரச்சினை என்னவென்றால், உடல் உறவில் ஒருமுறை சரியாக செயல்பட முடியவில்லையென்றால் தங்களுடைய பாலுறவு வாழ்க்கையே தோல்வி என்று நினைத்து விடுகிறார்கள்.

வெட்கப்படக் கூடிய செயல் என்ற எண்ணம் இருப்பதால், பல பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடுவது ஏதோ ஆணின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சரியான ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. இதனால் ஆணுடைய செக்ஸ் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படுகிறது.

சிலவற்றில் மனைவியை வற்புறுத்தினால் தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்று கணவனும், தான் ஏதாவது சொன்னால் உடலுறவில் தனக்கு அதிக விருப்பம் இருக்கிறது என்று கணவன் நினைக்கக் கூடும் என்று மனைவியும் தயங்குகிறார்கள்.

இதை மாற்ற, மனைவியின் ஒத்துழைப்பை கணவன் கேட்டுப் பெற வேண்டும். இதில் கூச்சப்படக் கூடாது. அதேபோல், பெண்கள் இது பற்றியெல்லாம் பேசினால் அசிங்கம் என்கிற நினைப்பை உதறிவிட்டு, மனைவி யானவள் கணவன் எப்படி செயல்பட்டால் தனக்கு இன்பம் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். நான்கு சுவருக்குள் தானே இருக்கிறீர்கள். அப்புறம் என்ன வெட்கம், தயக்கம்?
காவல் தெய்வம் சுடலை மாடன் வரை
விக்கிரமாதித்தன் கதையிலும் சில அசாதாரணமான நிகழ்ச்சிகள் கலந்தே காணப்படும். அவை பகுத்தறிவுக்கு ஒவ்வாதன வாகவே இருக்கும்.ஆனால்,அம்மாதிரி அசாதாரண நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால், கதையின் சுவாரஸ்யம் குறைந்து விடும். ஆகையினால்,கதையின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துவதற்காகவே இதனைத் தொகுத்தளிக்க முன்வந்தேன்.

  

ராஜகுமாரன் மந்திரிகுமாரனை வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான். அக்கானகத்தின் மத்தியில் ஒரு தடாகம் இருந்தது. அதில் ஒரு பெண் குளித்துக்கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ராஜகுமாரன் தன்னைப் பார்ப்பதை அவளும் தெரிந்துகொண்டாள். உடனே, ஒரு தாமரைப் பூவைப் பறித்துத் தன் கண்களில் ஒற்றிக் கால்மேற் போட்டுக் கொண்டாள். மறுபடியும் ஒரு பூவைக் கொய்து மார்புற அணைத்துத் தலையில் வைத்தாள். பிறகு, கரையேறிப் புறப் பட்டாள். அவள் போனபிறகு வச்சிரமகுடன் தன்னுடனிருந்த மந்திரிகுமாரனைப் பார்த்து,பேசாமடந்தை மறுபடியும் பேசாமல் இருப்பதைக் கண்ட விக்கிரமாதித்தன், திரைச்சீலையில் புகுந்திருந்த வேதாளத்தை அவளுடைய ரவிக்கையில் இருந்து பேசும்படி சொல்லி,
அவள் தாமரைப் பூவைப் பறித்துச்செய்த ஜாடைகளின் கருத்து என்ன?' என்று கேட்டான். அவள் தாமரைமலரைக் கண்ணில்ஒற்றிக்கொண்டதால் கண்ணாபுரம் அவளுடைய ஊராக இருக்கும். அவளுடைய பெயர் பத்மாவதி. பூவைக் காலில் போட்டுக் கொண்டதனால், அவளுடைய தகப்பன் பெயர் காலிங்கராயன் எனப்படும். மற்றொரு பூவை மார்பில் அணைத்துச் செருகிக் கொண்டதன் கருத்து, அவள் உன்னை அடைய விரும்புவதாகவும், ஆனால், ரகசியமாக இருக்கவேண்டும் என்பதே” என்று விளக்கம் செய்தான்.  பாலியல் செய்திகள் பரம ரகசியமாக  இருக்க வேண்டும். இதுபோல் இன்னும் ஓர் பரம ரகசியம் உண்டு. பேசாமடந்தை பளிச்சென்று பேசிவிட்டான். தன்னுடைய உடலில் இருந்து மற்றொரு உடலுக்குள் நுழைந்து அதனை இயக்கத்திற்கு கொண்டு வருதலையே கூடுவிட்டு கூடு பாய்தலாக அறிகிறோம். அந்த உடலில் சேர்ந்த பின்னர் தங்களின் பூர்வ கதைகள் அவர்களுக்கு நினைவில் இருந்ததும்,தாங்கள் புகுந்த உடலுக்குறியவனின் கடமைகளையும் நிறைவேற்றியதையும் அறிய முடிகிறது.
கடவுள் நம்மை தம்முடைய சாயலில் மனிதனை படைத்தார். கடவுள் தனக்குண்டான அத்தனை சக்திகளையும் மனிதனுக்கு கொடுத்தால் மனிதன் விபரீதமாக  சக்தியை உபயோகிக்க ஆரம்பித்து விடுவான். அது உலகிற்கே ஆபத்து. இறைவன் பல கடவுள்களையும் அழைத்து ஆலோசனைக் கேட்டார். வானத்தில் எட்டாத உயரத்தில் வைக்கலாமா அல்லது ஆழ் கடலில் சக்தியை வைத்து விடலாமா என்று பலரும் தமது எண்ணங்களை கூறினார். மனிதனுக்கு எட்டாத இடம் என்றால் அவனது உடலிலேயே வைத்து விடுவதே நல்லது என்று அவனின் உடலின் உள்ளே அவனுக்குத் தெரியாமல் வைத்துவிட்டார். 
வாழ்க்கை ஒரு இலக்கை நோக்கி ஓடுவதல்ல. போகும் பாதையை ரசிப்பது.  உங்களுக்கென ஆயிரம் கதவுகள் திறக்கும்.
GREETINGS BY HON.THIRU.KUMARi ANANTHAN

Thursday, May 4, 2023

கீச்சு குரல் அய்வு

பகுதி II  மகரக்கட்டு மருத்துவத்திற்கு புதிய கண்டுபிடிப்பு      பக்கம்1-8
கீச்சுக்குரல் சரிசெய்யும் புதிய தலையீடு (interventional voice therapy), 
குரல் பயிற்சி புதிய கண்டுபிடிப்பு, சிவா ENT மருத்துவமனை சிறப்புப் பயிற்சி முறைகள்.

குரல் நாண்களுக்கு இடையில் காற்று செல்லும் போது ஒலி ஏற்படுகிறது.  ஒலிக்காற்றை வாயினுள்,  மூக்கினுள் செலுத்தி வெளியேற்றி வார்த்தையை  உருவாக்கி பேசுகிறோம்.
“உருவகமாகச் சொல்வதானால், ஒலிகள் காற்றின் உதவியுடன் வார்த்தை உருவாகி வெளிவருகின்றன”
வார்த்தை ஒலி காற்றின் திசையை திருத்தி அமைப்பது தான் எங்கள் ஆய்வின் வெற்றி.
நாம் கையாண்ட புதிய ஆராய்ச்சி-குரல்வளையை சேதப்படுத்தாத   வகையில் பேச்சின் செயல் திறனை மேம்படுத்துகிறது. எங்கள் சிகிச்சை முற்றிலும் புதியது மற்றும் வழக்கமான முறைகளிலிருந்து வேறுபட்டது. எங்களின் சிகிச்சையானது அறுவைச்சிகிச்சை அல்லாத அண்ணாக்கு அதிர்வைக் கையாளுதலாகும். அதனால் ஆண் குரல் உருவாகிறது.  கீச்சுக்குரல் ஆண்களில் குரலில் தேவையான சுருதியை அடைவதில் அறிவியல் ஆராய்ச்சி முறைப்படி அண்ணாக்கு அதிர்வு மூலம் 5 நாட்களுக்கு அறுவைச் சிகிச்சை அல்லாத பயிற்சி அளிக்கிறோம். ஆண் குரல் நிரந்தரமாகிறது. சிவா ஈஎன்டி மருத்துவமனையில் தலையீடு(interventional voice therapy) குரல் பயிற்சி நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அறுவை சிகிச்சை இல்லாமல், காயம் ஏற்படுத்தாமல் வாய்வழி வழியாக அண்ணாக்கில் ஒரு சிறிய நூலை இணைப்பது தலையீட்டு குரல் சிகிச்சை. இந்த பயிற்சியானது சிவா ஈஎன்டி மருத்துவமனையில் கீச்சிக்குரலுக்கு  சிகிச்சையளிக்க  ஆராய்ச்சி செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. நோயாளி எந்த வலியையும் உணராமல் செய்யப்படுகிறது.

உங்கள் இலக்கை அடைய உங்கள் குரலைப் பயன்படுத்த முடியுமா?
மார்புக் குரலின் நன்மைகள் வெளிப்படையானவை - மிகவும் நட்பாக ஒலிக்கிறது, அதாவது இது மிகவும் ஆக்கபூர்வமான தகவல்தொடர்புகளை ஊக்குவிக்கிறது. மார்பகக் குரலின் இந்த அம்சம் பெரும்பாலும் அரசியல்வாதிகள், நிறுவன நிர்வாகிகள், விற்பனை மேலாளர்கள், உளவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் ஆகியோரால் தங்கள் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது - அதாவது, குரல் நேயர்களை கவரும் கருவிகளில் ஒன்றாகும்.
வணிகம் மற்றும் விற்பனையில், குரல் தொனி சில சமயங்களில் முக்கியமானதாக இருக்கும், குறிப்பாக நீங்கள் ஒரு பெரிய ஒப்பந்தத்தைத் தேடுகிறீர்கள் மற்றும் முடிந்தவரை நம்பிக்கையுடன் இருக்க விரும்பினால்  குறைந்த அதிர்வு ஒலிக்கு மாறுவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. யாரும் உயர்ந்த குரலில் பேச விரும்பவில்லை. மிக உயர்ந்த குரல் பாதுகாப்பின்மை மற்றும் மோதல் போக்கைக் குறிக்கிறது. மார்பு குரல், மாறாக, நட்பு, நம்பகத்தன்மை மற்றும் நல்ல பரஸ்பர பயனுள்ள உறவுகளை நிறுவுவதற்கான விருப்பத்தைப் பற்றி பேசுகிறது.
.
புரிந்துகொள்ளவேண்டியவைகள்
 கீச்சுக்குரல் சிக்கல்கள் குரல்வளை அமைப்பில் இல்லை. அதனுடன் கீச்சுக்குரல், குரல் சிகிச்சைக்காக அண்ணாக்கு அதிர்வு செய்வது பற்றி நீங்கள் கற்றுக் கொள்ளும் சில முக்கியமான விஷயங்கள் உள்ளன.
எடுத்துக்காட்டாக, நீங்கள் பேசும் போது குரல்வளையை அதிகம் இறுக்கிப்  பேசினால் குரல் பிரச்சனைகள் அதிகமாகும். இறுக்கிப்  பேசினால் குரல் பிரச்சனை  சரியாவதில்லை. இது பிரச்சனைகளை மோசமாக்கலாம். பேசும் போது அண்ணாக்கு ஒருபோதும் சோர்வடையாது. அண்ணாக்கு  அதிர்வு செய்வது, உரக்க வேகமான குரலில்  பேசினால்  அண்ணாக்கு பழுது, காயம் ஏற்படாது.பருவமடைதல் கீச்சுக்குரல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஒரு சிறந்த உறுப்பு அண்ணாக்கு ஆகும்.
ஒலிப்பு காற்றை எதிர் கொள்வது தொண்டையில் அதிர்வுறும் அண்ணாக்கு ஆகும். அதன் விளைவாக ஏற்படும் அதிர்வுகள், குரலுக்கான மூலப்பொருள் காற்றை இறுதியாக, மூக்கு மற்றும் நாசி குழி ஆகியவை எதிரொலிக்க அவற்றைச் சுற்றியுள்ள துவாரங்களுடன் தொடர்பு கொள்ளும். மூக்கு அறைகள் குறைந்த சுருதி ஒலியை உருவாக்குகின்றன. ஒலியின் அதிர்வுகளின் போது நாசி குழியில் எதிரொலி,அதிர்வுகளின் உணர்வை மையமாகக் கொண்டு உரத்த சத்தம்,குரல்: மார்பு குரல் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு நபரின் வழக்கமான ஒலியை விட சற்று சுருதி குறைவாக உள்ளது, ஏனெனில் நாசி ஒரு ரெசனேட்டராக பயன்படுத்தப்படுகிறது. 
நெஞ்சு குரல் என்றால் என்ன?
தலை மற்றும் மார்பு எதிரொலி,அதிர்வு( ரெசனேட்டர்கள்) இருப்பதால் மனித குரல் கருவி வெவ்வேறு அதிர்வெண்களின் ஒலிகளைப் பிரித்தெடுப்பதை சாத்தியமாக்குகிறது. தலை எதிரொலி,அதிர்வுகள் அதிக அதிர்வெண் கொண்ட ஒலிகளை உருவாக்குகின்றன. மார்பு எதிரொலி,அதிர்வு அதிர்வெண் கொண்ட ஒலிகளை உருவாக்குகிறது, எல்லோரும் மார்புக் குரலில் பேசலாம் - இதை உறுதிப்படுத்த, மார்பில் ஒரு கையை வைத்து, கீழ் தசைநார்கள் பயன்படுத்தி சில வார்த்தைகள் பேசினால் போதும். விலா எலும்பு உணரக்கூடிய வகையில் அதிர்வுறும் - இந்த குறைந்த அதிர்வுகளே குரலுக்கு மிகவும் அடையாளம் காணக்கூடிய ஒலியை அளிக்கிறது.
மார்புக் குரலில் பேசுவது எப்படி
தொழில்முறை பேச்சாளர்கள் அல்லது அறிவிப்பாளர்களின் உள்ளுணர்வைப் பின்பற்ற  தூண்டுவது அவர்களின் உறுதியான பேச்சு மற்றும் நம்பகத்தன்மை குரல் நேயர்களை கவரும். முதலில் இயற்கை  ரீதியான குரலாக இருக்கலாம். ஆனால் அக்குரலை தக்க வைக்க பயிற்சிகள் தேவை.
மார்புக் குரலில் பேசுவதற்கு, நீங்கள் "உடலுடன்" பேச வேண்டும், உங்கள் "தலையுடன்" அல்ல. இதனால் கூர்மையான ஒலிகள் நழுவாமல் இருக்கும். அதிர்வு மென்மையாக இருந்தால், மார்பின் குரல் நன்றாக ஒலிக்கும்.
உங்கள் குரல் கரகரப்பாகவோ அல்லது பதட்டமாகவோ தோன்றாமல் இருக்க, நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும் - எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மிதமிஞ்சிய தூண்டுதல் படக்கூடாது. கழுத்து, தோள்பட்டை மற்றும் மார்பு தசைகளில் விறைப்புத்தன்மை இல்லாததால் பேச்சை மென்மையாகவும், காதுக்கு இனிமையாகவும் மாற்றும்.
கீச்சுக்குரல் குரல் பயிற்சிகள். 
வசதியாக உட்காரவும் அல்லது மேல்நோக்கிப் படுத்துக்கொள்ளவும். உங்கள் இரு கைகளையும் வயிற்றில் வைக்கவும்.நீங்கள் சுவாசிக்கும்போது உங்கள் வயிறு வெளிப்புறமாக நகரும் வகையில் சுவாசக்காற்றை உள்ளிழுக்கவும் - உங்கள் தோள்கள் அல்லது மார்பை உயர்த்த வேண்டாம்.சுவாசக்காற்றை வயிற்றில் நிறுத்தி வைக்கவும். w a,a,a,a,a,a, அல்லது அம்மா அல்லது ஓம்  என்ற சொற்றொடரைச் சொல்லுங்கள். நீங்கள் ஒலி எழுப்பும்போது உங்கள் முழு உடலும் அதிர்வதை உணருங்கள். முழு உடல், மார்புக் குரலில் சிறப்பாகப் பேசுவதற்கு, அனைத்து நுரையீரல்களையும் காற்றில் நிரப்பி, அற்புதமாக சுவாசிக்க வேண்டும். குரலைத் திறக்க, குரல் நாண்கள் ஒலிகளை விடுவித்து, முக்கிய வேலையை தொண்டை மற்றும் மூக்கிற்கு மாற்ற வேண்டும்.
கழுத்தை மார்புநோக்கி வளைக்கவும்.
 உங்கள் கீழ் தாடை  உங்கள் மார்புநோக்கி  கீழே இருக்கும்படி உங்கள் தலையை கீழே சாய்த்து, பின்னர் " ஓம் " என்று மிகக் குறைந்த ஒலியைக் கூறவும். அதன் பிறகு, மெதுவாக உங்கள் தலையை நிறுத்தத்திற்கு உயர்த்தவும், ஒலியின் சுருதியை சரிசெய்ய முயற்சிக்கவும். முதலில், ஒலியை நிலையானதாக வைத்திருப்பது சிக்கலாக இருக்கும், மேலும் தலை உயரும் போது அதன் சுருதி படிப்படியாக உயரும். இது உங்கள் தசைநார்கள் பதட்டமாக இருப்பதையும் உங்கள் குரல்வளை சுருங்குவதையும் குறிக்கிறது. சுருதி தலையின் எந்த நிலையிலும் சமமாக இருக்கும் வரை உடற்பயிற்சியை ஒரு நாளைக்கு பல முறை செய்யவும். அத்தகைய முடிவை அடைவது குரல் நாண்களின் பிடிப்பை முழுமையாக அகற்றுவதாகக் கருதலாம்.
உச்சரிப்பு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் –
வலிமை, சுறுசுறுப்பு, ஒருங்கியக்கம் ஆகியவை கூட்டாக  உச்சரிப்பு  பயிற்சிகள். இது உங்கள் குரல் வளைக்கு மேலே உள்ள பகுதியை வடிவமைப்பதன் மூலம் உச்சரிப்பு மாறுபாட்டை உருவாக்குவது பற்றியது! இந்த பகுதியை குரல் பாதை என்று அழைக்கிறோம் (தொண்டையிலிருந்து உதடுகள் வரை உள்ள முழு இடம்). நீங்கள் விரும்பும் ஒலிகளைப் பெற உங்கள் குரலை  எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் புரிந்துகொண்டு, அதை பாதுகாப்பான முறையில் செய்தல் வேண்டும . 
அண்ணாக்கு, நாக்கு, உதடுகள் உடற்பயிற்சி
பயிற்சிகளைச் செய்யும்போது கண்ணாடியில் உங்களைப் பாருங்கள். சத்தமாக ஒலிக்க பேச பயப்பட வேண்டாம். எல்லாவற்றையும் விரைவாகச் செய்ய அவசரப்பட வேண்டாம். ஒரே நாளில் முடிவுகளைப் பெற முயற்சிக்காதீர்கள். தசைகள் பயிற்சி செய்யப்பட வேண்டும், இதற்கு குறைந்தது 21 நாட்கள் ஆகும்.
அண்ணாக்கு, நாக்கு, உதடுகள் மற்றும் கன்னங்களின் தசை அமைப்பு எவ்வாறு வலுவடைகிறது என்பதற்கான பயிற்சியினால் உச்சரிப்பு மாறும், மற்றும் பேச்சு தெளிவாக இருக்கும்.
சில இயற்கை அமைப்பு உதாரணங்கள் மூலம் கீச்சுக் குரல் பயிற்சி பெறுவோருக்கு மனதில் பதியும் படி குரல் வள  பயிற்சி சொல்லிக் கொடுக்கிறோம்
"வேலி" - உங்கள் பற்களை மூடிக்கொண்டு அகலமாக சிரிக்கவும். இந்த நிலையை பத்து வினாடிகள் வைத்திருங்கள் மற்றும் தொடக்க நிலைக்கு திரும்பவும். மேல் மற்றும் கீழ் வரிசை பற்கள் தெளிவாகத் தெரியும் என்பதை உறுதிப்படுத்தவும். உடற்பயிற்சியை பல முறை செய்யவும்.
"குழாய்" - உங்கள் பற்களைத் திறக்காமல், உங்கள் உதடுகளை முன்னோக்கி இழுக்கவும். அதே நேரத்தில், நீங்கள் "ஓஓஓ" என்ற ஒலியை பத்து விநாடிகளுக்கு இழுக்கலாம். உடற்பயிற்சியை மீண்டும் செய்யவும்.
"ஊசி" - உங்கள் வாயைத் திறந்து, உங்கள் கூர்மையான நாக்கை முடிந்தவரை நீட்டவும். இந்த நிலையில் ஐந்து விநாடிகள் வைத்திருங்கள் மற்றும் உங்கள் தசைகளை தளர்த்தவும். பல முறை செய்யவும்.
"அகலமாக்கு" - உங்கள் நாக்கை உங்கள் கீழ் உதட்டில் வைத்து முடிந்தவரை அகலமாக்குவதன் மூலம் உங்கள் பிரதிபலிப்பைக் காட்டுங்கள். மீண்டும் செய்யவும்.
"உதடுகளை நக்குங்கள்" - கீழ் தாடையை தளர்த்தி ஒரு நிலையில் வைக்க முயற்சிக்கவும். உங்கள் மேல் உதட்டை நக்குங்கள், முடிந்தவரை உங்கள் நாக்கை நீட்டவும். கீழ் உதட்டுடன் அதே செயலை மீண்டும் செய்யவும்.
" ஊஞ்சல்" - மேல் மற்றும் கீழ் உதடுகளை மாறி மாறி உங்கள் நாக்கால் தொடவும். உடற்பயிற்சி செய்யுங்கள் .
" எலி கூண்டு" - உங்கள் உதடுகளை மூடி, ஐந்து விநாடிகள் உங்கள் கன்னத்தில் உங்கள் நாக்கால் உள்ளே இருந்து அழுத்தவும். மற்ற கன்னத்தில் கையாளுதலை மீண்டும் செய்யவும்.
உங்கள் மென்மையான அண்ணத்தை அதிர பயிற்சி செய்வதற்கு, பழகுவதற்கு ஒரு வழி, ஊது குழல் மூலம் உறிஞ்சுவதாகும். உங்கள் மென்மையான அண்ணத்தை உயர்த்த உதவும் மற்றொரு முறை, தொண்டையில் வேற்றிடத்தை உருவாக்குவது. குலவை  சப்தம் எழுப்பியும் அண்ணாக்கை அதிரச் செய்யலாம்.
குரல் பாதை திறந்து 7 விதமான குரல் பயிற்சி
கீச்சுக்குரல் விடலை பருவத்தினர் தாங்களே கீச்சுக்குரலை உச்சரித்து தங்களை தாங்களே வேறு விதமாக உச்சரித்து பேச முயற்சிக்கிறார்கள், பேசுகிறார்கள், மேலும் அவர்கள் தங்களால் இயன்ற மிகப்பெரிய மூச்சை எடுத்து, தங்கள் தோள்களையும் மார்பையும் உயர்த்தி, குரல்வளையை கஷ்டப்படுத்துகிறார்கள். ஆனால் அது அவர்கள் தொண்டையில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது .  கீச்சுக்குரல் குரலுக்கு அத்தகைய பயிற்சி, சிகிச்சை தேவை இல்லை.
1.விழுங்குவது போல குரல் பாதை திறந்து குரல் பயிற்சி
குரல்வளை திறந்திருக்கும் போது குரல் பாதை பெரியதாக சுருங்காமல் இருக்கும் மற்றும் காற்றின் சுருதி குறைவாக இருக்கும்.
2.குரல்வளை கீழே இறக்கி குரல் பயிற்சி 
குரல்வளை கீழே இழுக்கப்படும் போது (கொட்டாவி விடுவது போல), குரல் பாதை நீளமாகிறது. இது காற்றில் குறைந்த சுருதியை உருவாக்குகிறது.
3.தாடையை மூடி குரல் பயிற்சி
 தாடை அதிகமாக மூடப்பட்டிருக்கும் போது, குரல் பாதை நீளமாக இருக்கும், மேலும் காற்றின் சுருதி குறைவாக இருக்கும்.
4.உங்கள் தலையை பின்னால் சாய்த்து, "அவ்வ்வ்வ்வ்" என்று தாழ்ந்த குரலில் சொல்வதன் மூலம் இதை நீங்கள் உணரலாம்.
5. உங்கள் மார்பில் கையை வைத்து, அது ஒலிப்பதை உணருங்கள். இப்போது உங்கள் தலையை முன்னோக்கி சாய்த்து, உங்கள் தலையில் ஒரு கையை வைத்து, "ஹீஈஈஈஈஈ" என்று உயர்ந்த குரலில் சொல்லுங்கள், உங்கள் மண்டை ஓட்டில் அதிர்வுகளை உணர்கிறீர்களா? இது பெண்கள் பேசும்  தொனி. உண்மையில், குரல்வளை  மேல் இருந்து உதடுகள் வரையிலான காற்றுப் பாதையானது ஒரே மாதிரியாகச் செயல்படுகிறது. 
6.பின்வருபவை எதிரொலி,அதிர்வு உறுப்புகள் (ரெசனேட்டர்கள்) சுருதியை செயல்படுத்தும்.
குரலுக்கு இசைவாக அதிரும் உடலின் பாகங்கள் எதிரொலி,அதிர்வு உறுப்புகள் (ரெசனேட்டர்கள்) என்று அழைக்கப்படுகின்றன.
மார்பு மற்றும் கீழ் உடல்: குறைந்த சுருதி மற்றும் திறந்த ஒலிகள்
தொண்டை - இடைப்பட்ட, எளிதாக பேசும் பெண்கள் தொனி
வாய் - மேல் இடைநிலை, நடு உயிரெழுத்துக்கள்
நாசி - நெருங்கிய, முன் உயிரெழுத்துகள், குறிப்பாக நாசி மெய்யெழுத்துக்கள்.
சைனஸ்கள்: பல காற்றறைகள், துளைகள் இருப்பதால், பல தரமான ஒலிகள், சுருதி மாற்றங்கள் காற்று வீச்சினால் ஏற்படுகிறது.
7.பேசும்போது கையை அசைப்பது உங்கள் குரலைக் கட்டுப்படுத்த உதவுமா?
இந்த விஷயத்தில் நிறைய ஆய்வுகள்  இல்லை, ஆனால் கையை நகர்த்துவது (மற்றும் பிற சைகைகள்) பாடுவதற்கு, பேசுவதற்கு உதவியாக இருக்கும் என்று நான் உறுதியாகக் கூற முடியும் என்று நினைக்கிறேன். அடிப்படையில், இது உணர்வுபூர்வமாகவும், அறியாமலும் பின்வருமாறு ஏற்படுகிறது:
உணர்வுபூர்வமாக, வெளிப்புற உடல் அசைவைப் பயன்படுத்தாமல் உள் உடல் அசைவை ,செயல்பாடுகளை வெளிப்படுத்துவது ஒரு சவாலாக இருக்கலாம். இதற்கு மிகவும் பொதுவான உதாரணம் காற்றோட்டம்: ஏராளமான மக்கள் தங்கள் காற்றோட்டத்தைப் பிரதிபலிக்க ஒரு கையைப் பயன்படுத்துவார்கள், இது காற்று எங்கு செல்கிறது என்பதை எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு நினைவூட்டுகிறது.
இங்கே ஒரு அறிவு பூர்வமான தகவல்  உள்ளது, இது மிகவும் சுவாரஸ்யமானது மற்றும் ஆச்சரியமாக இருக்கலாம்: கை பதற்றம் குரல்வளை பதற்றத்துடன் தொடர்புடையது. இதை நீங்களே சோதித்துப் பார்ப்பது மிகவும் எளிதானது: ஒரு சொற்றொடரைப் பாடும் போது, பதட்டமாக இருங்கள் மற்றும் உங்கள் கையை தசைநரம்புகளைத் தளர (ரிலாக்ஸ்) செய்து, உங்கள் மெதுவாகப் பாடுவது, பேசுவது எவ்வளவு எளிது என்பதைப் பாருங்கள். இது எதிர்மாறாகவும் செயல்படுகிறது: நீங்கள் தளர்வான கையால் பதட்டமாகப் பாட, பேச முயற்சித்தால், அதைச் செய்வது உண்மையில் மிகவும் கடினம். நீங்கள் ஒரு செயலை சரியாகச் செய்யும்போது, உங்கள் கை விறைப்பு அடைவதைத் தடுக்கிறீர்கள், இது குரல்வளை பதற்றத்தைக் குறைக்கிறது, இருப்பினும் முற்றிலும் இல்லை. அடிவயிற்று சுவாசம் மூக்கை நோக்கி செல்லும் போது கை சைகைகள், கைகளும் அடி வயத்தில் இருந்து மூக்கு நோக்கி மேலாய் கை அசைய வேண்டும்.
கீச்சுக்குரல் சிகிச்சையளிக்கும் போது வயிற்று சுவாசத்திற்கு என்ன செய்வது என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். கையை உயர்த்துவதன் மூலம் வயிற்று சுவாசம், கையின் இயக்கத்துடன் காற்று பயணம் ஆகும். பேசும் போது கைகளை நகர்த்தவா?  நான் உண்மையாக உணர்ந்ததால் விளக்க முயற்சிக்கிறேன். பல முறை, பாடகர்கள் பாடுவதை நான் பார்த்து உணர்ந்துள்ளேன். அதிக ஒலி எழுப்பும் பொது குரல் பிசிறாமல் இருப்பதற்கு பாடகர் கையை தலைக்கு மேலாக உயர்துவர். எதிரொலிக்கும் அதிர்வுகளை உணரவும் உருவாக்கவும் கற்றுக்கொள்வதன் மூலம் பேசும்போது உதரவிதானம் இயற்கையாகவே உங்கள் குரல் வழிக்கு காற்றை வெளியிட்டு தள்ளும்.
உயர் சுருதியிலிருந்து குறைந்த சுருதியை உருவாக்குவதில் பின்வரும்  புது பயிற்சிகளை நங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். முடிவுகள் வெற்றி என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. 
1. தாடை மற்றும் உதடு திறப்பு உயரும் சுருதியுடன் அதிகரிக்கிறது, இது குரல் பயிற்சியின் விளைவாக இருக்கலாம். இதற்கு நேர்மாறானது நாம் செய்வது 2. நாவின் நிலை உயிரெழுத்தின் சிறப்பியல்பு. அதிக காற்று ஓட்டத்தை நாங்கள் உருவாக்குகிறோம். 3. குரல்வளை முகப்பில் உள்ள குரல்வளை திறப்பு மற்றும் துளை தொடர்ந்து குறுகியதாக இருக்கும், மேலும் குறுகிய மற்றும் மிக உயர்ந்த பிட்ச்களில் குறுகிய குரல்வளை திறப்புகள் ஏற்படுகின்றன. நாம் குரல்வளையைத் திறக்கிறோம் 4. ஹையாய்டு எலும்பு மற்றும் நீளமான குருத்தெலும்புகளின் ஒரு முற்போக்கான மேல்நோக்கி இயக்கம் உயரும் சுருதிக்கு ஒத்திருக்கிறது. நாங்கள் ஹையோடைக்  கீழ் நோக்கி  இறக்குகிறோம். 5. உயரும் சுருதியானது குரல்வளை (வென்ட்ரிக்கிள்) செங்குத்தாக சுருங்குகிறது மற்றும் குரல் நாண்கள் (வென்ட்ரிகுலர் பேண்டுகளை) நெருக்கமாக்குகிறது(adduction). நாங்கள் குரல்வளையைத் திறக்கிறோம்.
இந்தப் பயிற்சிகளைப் புரிந்துகொள்வதும், செய்வதும் கடினம். எவரும் பின்பற்றி செய்யக்கூடிய படிப்படியான பட்டறைகளை நாங்கள் செய்கிறோம், சொல்லிக் கொடுக்கிறோம்.
தண்ணீரில் மூழ்கியவரை காப்பாற்றுவது தான் நமது  முதல் கடமை.
 
தண்ணீரில் மூழ்கியவரின் கையில் 6 விரல்கள் இருக்கிறதே, காப்பாற்றவா வேண்டாமா என்று பலர் யோசிக்கிறார்கள். பலர் கீச்சுக்குரலுக்கு மருத்துவம் தேவையில்லை என்று உலகம் முழுவதும் எண்ணுகிறார்கள். ஆனால்  நாங்கள் இன்று 20.06.2023 வரை 1500 கிச்சிக்குரல் ஆடவர்கள் குரலை சரி செய் த்துள்ளோம். அவ்ரகளுக்கு புது வாழ்வு கொடுத்துள்ளோம். 
அண்ணாக்கு அதிர்வு, தலையீடு (interventional voice therapy), கீச்சுக்குரலுக்கு மருத்துவம் என்று குரல் சிகிச்சை செய்துள்ளோம். இந்த தொழில்நுட்பத்தை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். கீச்சிக்குரல் ஆடவர்கள் குரலை பற்றிய ஆராய்ச்சியை ஊக்குவிப்பதில் அனைத்து மருத்துவரின் பங்கு  ஒரு முக்கிய   கடமையாக  இருக்கும். கீச்சிக்குரல்  பேச்சாளர்களிடமிருந்து  குரல்  மாதிரிகளை நாங்கள் வழங்க முடியும். ஆராய்ச்சியில் பங்களிக்க விரும்புபவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
 
அண்ணாக்கு தோற்றம்  குழந்தைகளில், கீச்சிக்குரல் ஆடவர்கள்            ஆண்களில்

                                                                                                                                               

  
                                             
கீச்சிக்குரல் ஆடவர்கள்  பிறப்புறுப்பு             ஆண்களின் பிறப்புறுப்பு                                               
                                                                                                           
கீச்சிக்குரல் ஆடவர்கள் குரலை பற்றி மேலும் புரிந்துகொள்ள உதவும் ஆராய்ச்சியே முக்கியமானது
பொதுவாக, நோய் கண்ணுக்குத் தெரியும், கீச்சிக்குரல் ஒருவருக்கு ஏன் என்பதை விளக்கக்கூடிய வெளிப்படையான வேறுபாடுகள் எதுவும் தெரிவது  இல்லை.
கீச்சிக்குரல் ஆண்களுக்கு நாம் இன்னும் செய்ய வேண்டிய ஆய்வுகள்.
கீச்சிக்குரல் கணக்கெடுப்பு.
• சிறுவர்களும் ஆண்களும் குரல்  மாற்றத்தை  வித்தியாசமாகச் சமாளிக்கிறார்களா? அதனால் தான் வேறுபட்ட குரல்களும், மாற்றங்கள்,நடவடிக்கைகளும் ஏற்படுகிறதா?
•கீச்சிக்குரல் ஆடவர்கள் குரல்  உணர்ச்சியின் வினைத்திறனா(mutational falsetto)? அல்லது குழந்தை குரலே தெடர்கிறதா?
•கீச்சிக்குரல் ஆடவர்கள்  குரல் அறிதல், சோதித்தல் தொழில்நுட்பத்தை பொது மக்களிடம்  பரவலாக்குவது எப்படி?.
•டிஸ்லெக்ஸியா மற்றும் கீச்சிக்குரல் ஆகியவை செயலாக்கப் குறையைப் பகிர்ந்து கொள்கின்றனவா?
•கீச்சிக்குரல் ஆடவர்கள் குரல் அறிவியல் ஆய்வு  .
•கீச்சிக்குரல் ஆடவர்கள் குரல் மரபணுக்கள் ஆய்வு.
•கீச்சிக்குரல் ஆடவர்கள் பாலியல் ஆர்வத்திற்கும், ஆர்வமில்லாமைக்கும் என்ன தொடர்பு?
• மூளை, செயல்பாட்டு MRI ஆராய்ச்சி, குரல் பருவமடைவதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
• பருவமடையும் நபர்களில் பேச்சு இயக்கம் மாறுபாடு: ஒரு குரல் பாதை காந்த அதிர்வு இமேஜிங் ஆய்வு.
•கீச்சிக்குரல் ஆடவர்கள் நரம்பியல் தளங்கள் மற்றும் மூளை  ஆராய்ச்சி, மூளை மீது டிரான்ஸ்கிரானியல் நேரடி மின்னோட்டம் தூண்டுதல் ஆய்வு.
வேறுபட்ட நிலையில் அண்ணாக்கு செயலை கணக்கிடல் ?

Further research needed in puberphonia

Assesing the senses.
Assesing the frequency of voice in different dysphonia.
Importance of uvula in speech production 
Do boys and men speek differently with puberphonia?
Emotional reactivity in puberphonia.
Testing voice recognition technology with people who has puberphonia.
Do dyslexia and puberphonia share a processing deficit?
The science of puberphonia.
Genes for puberphonia.
What is the relationship between puberphonia and sex activity?
Brain, functional MRI research helps us to understand puberphonia.
Speech Tract Movement Variability in People Who puberphonia: A Vocal Tract Magnetic Resonance Imaging Study.
Neural bases of puberphonia and its treatment,
Transcranial direct current stimulation over left inferior frontal cortex improves speech Fluency in adults who puberphonia.

பருவமடைதல் குரல் மாற்றத்தில் ஏன் தவறாகப் பேசுகிறோம்: 
ஐந்து   முக்கிய காரணங்கள்
1.பேசுவதில் கவனம் செலுத்துவதில்லை. பேசுவதில் விடலை பருவ இளைஞர்கள் பெரும்பாலும் சில ஒலிகளின் உச்சரிப்பில் கவனம் செலுத்துவதில்லை.
 2.அண்ணாக்கு இருக்க வேண்டிய துடிப்பில்,இல்லை. உருவகமாகச் சொல்வதானால், ஒலிகள் காற்றின் உதவியுடன் வெளிவருகின்றன, அவற்றின் தரம், நாம் எவ்வளவு, காற்றறை வாயினுள்,  மூக்கினுள் செலுத்தி வெளியேற்றி பேசுகிறோம் என்பதைப் பொறுத்தது.
3.சோம்பல்.தவறான ஒலிக்கான பொதுவான காரணங்களில் ஒன்று பொதுவான சோம்பல். நாம் வாயைத் திறக்க மிகவும் சோம்பேறியாக இருக்கிறோம், தாடையைப் பயன்படுத்துவதில்லை - பேசும் போது அது அசைவதில்லை, உதடுகள் மட்டுமே அசைகின்றன. 
4. நீண்ட விரிவுரைகளுக்குப் பிறகு ஆசிரியர்கள் தங்கள் குரலை இழந்து கரகரப்பான கிசுகிசுவுக்கு மாறுவதை நீங்கள் கவனித்தீர்களா? 
பொதுவாக ஆசிரியர்கள் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக பேசுகிறார்கள், அதாவது அவர்கள் தங்கள் திறன்களின் வரம்பிற்கு மேல் குரல்  தசைநார்களை பயன்படுத்துகிறார்கள். இந்த தசைகளில் ஒரு குரல் மொட்டு ( vocal nodule) தோன்றும்.  குரல் கெட்டுவிடும் என்பதற்கு வழிவகுக்கிறது. இந்த முடிச்சுகளை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அகற்ற முடியும், ஆனால்  அறுவை சிகிச்சைக்கு முன்பு போல் நன்றாக இருப்பீர்கள் என்பது உண்மையல்ல.
எனவே, தொழில்முறை விரிவுரையாளர்கள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள், ஆசிரியர்கள், குரல் மற்றும் தசைநார்களை பாதுகாக்க, மார்பு ரெசனேட்டரைப் பயன்படுத்தி பேச கற்றுக்கொள்ளுங்கள், பேசும்போது குரல்  தசை நார்கள்  "தவிர்த்து" தோராயமாகச் சொன்னால், அவர்கள் தொண்டையால் அல்ல, "மார்புடன்" பேச கற்றுக்கொள்ளுங்கள். ஆழமான குரலின் ஒலி எப்போதும் சோர்வடையாமல்,பிசிராமல், பயனுள்ளதாக இருக்கும்: அவை சிறப்பாக செயல்படும், எடுத்துக்காட்டாக, நீங்கள் எதிர் பாலின உறுப்பினரை ஈர்க்க வேண்டியிருக்கும் போது அல்லது சாத்தியமான வணிக கூட்டாளர்களை விரைவாக வெல்ல வேண்டியிருக்கும் போது மற்றும் அவர்கள் உங்கள் பேச்சைக் கேட்கவும், நீங்கள் சொல்வதை நம்பவும் செய்யும்..
5.காலம் கடந்தும் காப்பாற்றுவது மொழி உயிரின் ஒலியே. 
பேச்சு என்பது மனதின் உருவாக்கம். ஒலி என்பது உண்மை, ஆனால் சொல் உண்மையில்லை.எழுத்து மொழிக்குப் பேச்சு மொழியே அடிப்படையாக அமைகின்றது. மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ற வரிவடிவத்தை உருவாக்கிக் கொண்டு எழுதப் பெறும் மொழி வழக்கை எழுத்து மொழி என்று குறிப்பிடுகின்றோம். இதனால் பேச்சு மொழியை ஓடும் ஆறு என்பர். எழுத்து மொழியை அதில் மிதக்கும் பனிக்கட்டி என்பர்.
பேச்சு மொழியை விட எழுத்து மொழியின் ஆயுட்காலம் மிகுதியாகும். குறிப்பிட்ட மொழியைப் பேசும் மக்கள் கூட்டம் அழிவுறும் போது அம்மொழியும் அழிந்து விடுகின்றது. ஆனால் அவர்களால் எழுத்து மொழியில் உருவாக்கப் பெற்ற இலக்கியங்கள், இலக்கணங்கள், கல்வெட்டுகள் ஆகியவை எல்லாம் காலம் கடந்தும் நிற்கின்றன; உதவுகின்றன. சில நேரங்களில் பேச்சு மொழியில் நிகழும் மாற்றங்களால் அம்மொழி முற்றுமாக மற்றொரு மொழியாகத் திரிந்து விடுவதும் உண்டு. இந்த நிலையிலும் அந்த மொழியின் இயல்பைக் காலம் கடந்தும் காப்பாற்றுவது அம்மொழியின் உயிரே ஒலி ஆகும்.