Friday, May 5, 2023

புதிய புத்தகம் பகுதி 4

பகுதி IV       பாலியல் மெய்யும் பொய்யும்  பக்கம் 1-9
உடல் முழுவதுமே பாலுறுப்பு தான். ஆகவே பாலுறவு அசிங்கமானது என்று கூறினால் மொத்த உடலும் அசிங்கமானது என பொருளாகிறது. ஆணும் சரி பெண்ணும் சரி, ஆபாசப் படங்களில் காட்டப்படுபவை அனைத்தும் உண்மை என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது தவறு. திரைப்படங்களில் காட்டப் படுவதெல்லாம் உண்மையென ஒரு குழந்தை நம்புவதைப் போன்ற நம்பிக்கை. இந்த நம்பிக்கை ஆழ்மனதில் பதிவாகிவிடுகிறது. மனித உடலில் நிகழும் பாலின்பம் ஒரு பேரின்ப அனுபவம் மட்டுமல்ல. உடல் நலத்தையும் மன நலத்தையும் சிறப்புறப் பேணக் கூடிய ஒரு மாமருந்து. மேலும் எவ்விதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத ஒரு அரு மருந்து. மூளையை அற்புதமாகச் செயல்படச் செய்கின்ற ஒரு அமிர்தம். இன்றைய மருத்துவ அறிவியலும், உளவியலும் பாலின்பத்தைப் பற்றி இவ்வாறு கூறுகிறது. இந்த மருத்துவத்திற்காக தனியாக பணத்தைச் செலவளிக்கத் தேவையில்லை. வீட்டை விட்டு வெளியில் எங்கும் சென்று தேடத் தேவையுமில்லை. அது தவிர அன்பெனும் கடவுளைத் தம்பதியிரிடையே உருவாக்கி குடும்ப வாழ்க்கையைச் சொர்க்கமாக மாற்றக் கூடிய ஒரு மந்திர சக்தியும் கூட. உடலில் நிகழும் உச்ச கட்ட பாலின்பத்தால் ஏற்படுகின்ற நன்மைகளை பட்டியலிடத் தொடங்கினால் வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்தையும் தான் பட்டியலிட வேண்டும். இந்த உண்மை இருபாலருக்கும் பொருந்தும். மனித இனத்திற்கு மட்டுமே இயற்கையாய் வழங்கப்பட்ட சிறப்புக்கொடை பாலின்பம். குட்டிபோட்டு பாலூட்டி வளர்க்கும் விலங்குகள் அனைத்தும் இனவிருத்திக்காக மட்டுமே இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. மனித இனம் மட்டுமே இன்பத்திற்காகவும் பாலுறவில் ஈடுபடுகிறது அதனால் எந்தவொரு விலங்கினத்தையும் விடப் பலமடங்கு கூடுதலாக பாலுறவில் ஈடுபடுகிறது. அவ்வாறு பாலின்பத்தில் ஈடுபட்டபோதெல்லாம் அறிவை வளர்க்கும் வேதிகள் மனித மூளையில் சுரக்கின்றன. அதனால் மனித இனத்தின் அறிவு வளர்ந்து கொண்டேயிருக்கிறது .அறிவு வளர்ச்சி காரணமாக தன்னையொத்த விலங்கினங்களை விட புத்திசாலித்தனமான விலங்கினமாக மனித இனம் உருவாகி, இறுதியில் உயிரினங்களின் நிரந்தரமான ஆட்சியாளனாக உயர்ந்து நிற்கிறது மிருகங்களோடு மிருகமாக வாழ்ந்து கொண்டிருந்த மனித இனத்தை மிருகங்களின் தலைவனாக உணர்த்தியது மூளை. அந்த மூளையை அவ்வாறு இயங்க வைத்தது இயற்கையால் வழங்கப்பட்ட பாலின்பம்.

பாலியலில் பொதுவாக நிலவும் தவறான கருத்துக்கள் எவை?
விந்து வெளியேறினால் சக்தி வெளியேறுகிறது. விந்து என்பது இரத்தம், சுயஇன்பம் செய்வது பாவச் செயல் இவைகள் அதிகளவில் ஆண்களிடையே நிலவும் தவறான கருத்துக்களாகும். மேலும், பிரம்மச்சரியம், கன்னித்தன்மை, சிறிய ஆணுறுப்பு ஆகியவை பற்றியும் பல தவறான கருத்துக்கள் உள்ளன. இந்த கருத்துக்கள் தலைமுறை தலைமுறையாக பரப்பப்பட்டு வந்துள்ளன. இதனால் சிறிய பிரச்சினை உள்ள நபர் கூட, மேலும் பல பிரச்சினைகள் தனக்கு இருப்பதாக நம்பிக் குழம்பிப் போகிறார்.
பாலுணர்வின் ஒரு பகுதி சுய இன்பம். பாலுறவில் ஈடுபடுவது போன்ற கற்பனையில் அனுபவிக்கும் இந்த சுய இன்பப் பழக்கம் 95 சதவீத ஆண்களிடம் உண்டு. சுய இன்பப் பழக்கம் ஒரு தற்காலிக நிவாரணத்தைத் தருகிறது. இது தவறான பழக்கம் இல்லை. இதுவும் இயற்கையின் ஒரு பகுதியாகும்.
சுய இன்பம் என்றால் என்ன?
பாலுறுப்புக்களை தனக்குத்தானே தூண்டி உச்ச நிலையை அடையும் வரை சுகம் அனுபவிப்பது தான் சுயஇன்பம்.
ஆண்களைப் போல் பெண்களும் சுயஇன்பம் அனுபவிக்கிறார்களா?
ஆம். 
சுயஇன்பத்தால் தீங்கு விளையுமா?
நிச்சயமாக இல்லை. உடலுறவால் எந்தத் தீமையும் இல்லை என்று கூறும்போது, சுயஇன்பத்தால் மட்டும் எப்படி தீங்கு விளையும்? உடலுறவுக்கு முன்மாதிரி, ஒத்திகை போலத்தான் இது. இதனால் ஆபத்து என்ற கட்டுக்கதை காலங்காலமாக நிலவிவருகிறது. கண்களின் கீழ் கருவளையம் படரும், நரம்புத் தளர்ச்சி, மூட்டுக்களில் வலி, ஆண்மைக்குறைவு, புத்தி சுவாதீனமின்மை ஆகியவை ஏற்படும் என்பவையெல்லாம் வெறும் மூடநம்பிக்கைகள் தான்.உண்மையில், சுயஇன்பத்தின் மூலம் நரம்பு மண்டலம் புத்துணர்ச்சி பெறுகிறது. இது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருப்பதால் பாலுறவுக் குற்றங்கள், கற்பழிப்பு போன்றவை அதிகம் நிகழ்வதில்லை. தேவையில்லாத கர்ப்பங்கள் ஏற்படுவதில்லை. இந்த முறை பாதுகாப்பாக இருப்பதால் பாலியல் நோய்கள் பரவுவதில்லை.
சுயஇன்பத்தில் அதிகமாக ஈடுபட்டால் தீங்கு உண்டாகுமா?
அதிகம், குறைவு என்ற அளவுகோல்கள் ஒன்றும் இதற்கில்லை. அடிக்கடி உடலுறவு கொள்வதால் எந்த நட்டமுமில்லை. அதுபோலத்தான் இதுவும். உடலுறவில் ஆணும் பெண்ணும் இணைந்து ஈடுபடுகிறார்கள். இதில் தனித்தனியே செயல்படுகிறார்கள் அவ்வளவுதான்.
பல ஆண்டுகளாகத் தினமும் தொடர்ந்து இரண்டு மூன்று தடவைகள் சுயஇன்பம் பெறுபவர்களை மருத்துவ ரீதியாகப் பரிசோதித்த போது, அவர்களெல்லாம் ஆரோக்கிய மாக இருப்பது தெரிந்தது. இரத்தம், விந்தின் அளவு, செயல்திறன் ஆகியவை வழக்கம்போல் நன்றாக இருந்தன. இந்தச் சோதனை பல நாடுகளில் பல முறை நிகழ்த்தப்பட்டு இந்த உண்மை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
சுயஇன்பப் பழக்கத்தைக் குணப்படுத்த முடியுமா?
குணப்படுத்த இதுவொன்றும் நோயல்ல. இது இயல்பானது. தேவையானது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அறியாமையால் இதுபற்றித் தேவையில்லாத கவலையில் ஆழ்வதை வேண்டுமானால் நோய் என்று சொல்லலாம்.
அதிகமான விந்து வெளியேற்றத்தால் மூப்புத் தோற்றம் ஏற்படுகிறதா?
விந்து வெளியேற்றத்தால் எந்தவிதத் தீங்கும் கிடையாது.வயதாவதற்கும் மூப்புத் தோற்றம் ஏற்படுவதற் கும் அது காரணமல்ல. விந்து ஆண்களின் உடலில் நாளுக்கு நாள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. தன் உடலிலேயே விந்தை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தாலும் அது நடக்காத காரியம். பலர் நினைப்பது போல விந்து உயிர் நிலை அல்ல. ஒரு துளி விந்து என்பது நூறு துளி இரத்தமும் அல்ல. ஆகவே, வீண் கவலை வேண்டாம்.
விந்தின் அளவு குறைவாக இருத்தல், விந்தின் நிறம் மாறுதல் ஆகியவை ஆண்மைக் குறைவின் அறிகுறிகளா?
இல்லை. இல்லவே இல்லை. விந்தின் அளவு என்பது கிளர்ச்சியின் செறிவு, உறவுகளுக்கு இடையேயான கால இடைவெளி, வயது ஆகியவற்றைப் பொறுத்தே அமைகிறது. மனிதனுக்கு வயதாக வயதாக விந்தின் நிறம் வெள்ளையில் இருந்து லேசான மஞ்சளாக மாறுகிறது. விந்தின் அளவும் குறைகிறது. விந்தின் அளவோ, நிறமோ ஒருபோதும் பாலியல் இன்பத்தைத் தீர்மானிப்பதில்லை. இணையின் திருப்தியும் இதனால் குறைவதில்லை.
தூக்கத்தில் விந்து வெளியேறினால் உடல் பலவீனமாகி விடுமா?
இதுவும் தவறான கருத்துதான். இது முழுக்க முழுக்க உளவியல் சம்பந்தப்பட்டது. குழந்தைப் பருவம் முதற் கொண்டு விந்து வெளியேறினால் போயே போச்சு. விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது போன்ற தவறான கருத்துக்கள் திணிக்கப்பட்டு வந்திருக்கின்றன. நமது பிறப்புறுப்புக்களும், அவை சார்ந்தவையும் இரகசியமானவை. அவை பற்றி பேசவும் கூடாது என்ற நிலைக்கு நம் மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து விந்து வெளியேற்றத்தினால்தான் நரம்புத்தளர்ச்சி ஏற்படுகிறது என்பது வரை பல தவறான கருத்துக்கள் உருவாகியிருக்கின்றன. தூக்கத்தில் விந்து வெளியேறுவதால் பலவீனம், சோர்வு ஆகியவை ஏற்படுவதில்லை.
சுயஇன்பத்தில் ஈடுபடுவதால் ஆண்குறி வளைந்து போகுமா?
இல்லை. இயல்பாகவே பலருக்கு சிறிது வளைந்த நிலையில் இருக்கும். இதனால் உடலுறவின் போது எந்தப் பாதிப்பும் இல்லை.
விந்துவை சுயஇன்பத்தின் மூலம் வீணாக்கலாமா? வீணாக்கினால் முதுமை விரைந்து வருமா?
எச்சிலைப் போன்றது தான் விந்துவும். வேண்டும் போதெல்லாம் சுரந்து கொண்டிருக்கும். ஒருதுளி விந்து, 1000 துளி இரத்தத்துக்கு சமம் என்பதெல்லாம் தவறான கருத்தாகும். இரத்தத்துக்கும் விந்துவுக்கும் உடல்ரீதியா எந்த சம்பந்தமுமில்லை. புராஸ்டேட், செமினவெசிகில்ஸ் போன்ற சுரப்பிகளால் சுரக்கப்படுவதுதான் விந்தாக வெளிவருகிறது. இதில் கர்ப்பத்தை உண்டாக்கு ஆண் உயிரணுக்களின் அளவு ஒரு சதவீதம்தான் இருக்கும். விந்து வீணாகிறதே என்ற பயம் யாருக்கும் தேவையில்லை. 
மாதர் போகம் மாதமிருமுறை என்ற பழங்கால கருத்தெலாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தவறான கருத்தாகும்.
விந்தின் அளவு குறைவது ஆண்மைக் குறைவின் அறிகுறியா?
அல்ல. வெளிவரும் விந்தின் அளவு பல்வேறு காரணங்களால் வேறுபடும். நீண்ட இடைவேளை மற்றும் முழுமையான உணர்ச்சித் தூண்டுதல்களின் போது அளவு அதிகரிக்கலாம். வயது அதிகமாகும் போது அளவு குறையலாம். விந்தின் அளவுக்கும் உடலுறவின் செயல்திறனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
விந்தின் நிறமாறுபாடு, நீர்த்திருத்தல் ஆகியவை ஆண்மைக் குறைபாடாகுமா?
இல்லை. வயது அதிகரிக்கும்போது நிறம் வெளி மஞ்சளாகும். நீர்த்திருப்பது உடலுறவு இன்பத்துக்கோ கர்ப்பத்துக்கோ இடையூறு அல்ல.
தூக்கத்தில் விந்து வெளியாவது உடல் சோர்வை உண்டாக்குமா?
இல்லை. தவறான விளம்பரங்களின் மூலம் இந்தக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. விந்துவின் முக்கியத்துவம் பற்றிய மூட நம்பிக்கைகள் சிறுவயதிலேயே தவறான விளம்பரங்கள் மற்றும் ஆட்கள் மூலம் மனதில் பதிந்து போவதால் ஏற்படும் பயம்தான் இது. விந்து வெளியாவதால் நாம் இழக்கும் கலோரி, ஒரு எலுமிச்சம் பழச்சாறு கொடுக்கும் சக்தியின் அளவுதான் இருக்கும்.
விந்தை அடக்கி வாழ்ந்தால் ஆயுள் கூடும்; விளையாட்டு வீரர்களாகத் திகழலாம் என்பது உண்மையா?
இல்லை. அப்படியானால் உண்மையாகவே பிரம்மக சாரிகளாக இருப்பவர்களெல்லாம் விளையாட்டு வீரர்களாக அல்லவா இருக்க வேண்டும்? 

பிரம்மச்சரியம் என்றால் என்ன?
பாலியல் செயல்களை முற்றாக நிராகரிப்பதே பிரம்மச்சரியம். நீண்ட நாள் உறவு கொள்ளாமலிருப்பது உடலுக்கு நல்லதா? உறவு கொள்ளாமல் விந்துவை அடக்கி வைத்திருப்பது நல்லது என சிலர் கருதுகின்றனர். ஆனால், அது சற்றும் உண்மையல்ல. சொல்லப் போனால், நீண்ட காலம் உறவு கொள்ளாமல் இருந்தால்தான், செய்யும் பணிகளில் கவனமின்மை உட்பட பலவித மனநலப் பிரச்சினைகள் தோன்றக்கூடும். அதன் பின் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உறவுகொள்ள விரும்பினாலும் உறுப்பின் ஒத்துழைப்பு குறைவாகவே இருக்கும்.
பிரம்மச்சரியம் நல்லதா?
இது இயற்கைக்கு எதிரானது. தவறான நம்பிக்கைகளால் விந்தைப் பாதுகாப்பதன் மூலம் உடல்நலத்தைப் பேண முடியும் என்று கருதுகிறார்கள். அவர்களால் அது முடியாமல் போகும்போது குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி பல்வேறு மனப் போராட்டங்களுக்கு ஆட்படுகிறார்கள். திட்டமிட்டு உணர்ச்சிகளை அடக்கி வைப்பதும் பாலுறுப்புக்களை செயல்படுத்தாமல் இருப்பதும், பிறகு தேவைப்படும் போது பிரச்சினைகளை உருவாக்கும். உடலைத் தன்போக்கில் இயங்க விடுங்கள். பிரம்மச்சரியத் தால் எந்தப் பயனும் இல்லை. தீங்குகள்தான் உண்டு.
திருமணமானவர்களும் சுயஇன்பத்தில் ஈடபடுபவர்ககளா?
ஆமாம். மனைவி இல்லாதபோது அல்லது ஒத்துழைக் காத போது ஆண்கள் இதில் ஈடுபடுகிறார்கள். மனதில் கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு இதில் ஈடுபடும் போது கிடைக்கும் இன்பத்தைப் பலர் விநோதமாக உணர்கிறார்கள். இது இயல்பானதுதான். தவறேதுமில்லை. ஆண்களை விடவும் திருமணமான பெண்களுக்கு சுயஇன்பம் மன நிம்மதியை அளிக்கிறது. உடலுறவின் போது பெண்கள் உச்சக்கட்டத்தை எட்ட முடியாமல் போகலாம். அதிகமாக அப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது. அந்த நிலையில் ஏக்கமும் எரிச்சலும் அடையாமல் பெண்கள் இந்த முறையைக் கையாண்டு சுலபமாக உச்சக்கட்டப் பரவசத்தை அடைகிறார்கள்.
மிகவும் வயதான பின்பு சுயஇன்பத்தில் ஈடுபட லாமா?
உடலுறவுக்கு வயது ஒரு தடையல்ல. ஆர்வமும் ஆரோக்கியமும் இருந்தாலே போதும். ஆகவே, சுயஇன்பம் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்?
சுயஇன்பப் பழக்கத்தால் உடலுறவின் போதோ. கர்ப்பத்திலோ பெண்களுக்குப் பிரச்சினைகள் வருமா?
 நிச்சயமாக இல்லை.
சுயஇன்பத்திற்காக பெண்கள் சில பொருட்களை நாடுவது நல்லதா?
மேலை நாடுகளில் இதற்கென பல்வேறு விதங்களில் செயற்கையான ஆணுறுப்புகள் (Vibrator) கிடைக்கின்றன. நம் நாட்டில் அதை வாங்குவதோ, பாதுகாப்பாக வைத்திருப்பதோ சுலபமல்ல.
மாதவிலக்குச் சமயங்களில் பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபடலாமா?
சுத்தமாக இருக்கும்பட்சத்தில் ஆர்வமிகுதியால் உடலுறவிலும் ஈடுபடலாம். ஆணுக்கோ பெண்ணுக்கோ இதனால் பாதிப்பில்லை. அதுபோலவே விரும்பினால் சுயஇன்பமும் பெறலாம்.
பொதுவாக, எந்த வயதில் சுயஇன்பப் பழக்கம் ஏற்படுகிறது?
பருவம் தொடங்கும்போது தற்செயலாகவே தொடு உணர்ச்சியின் மூலம் இந்த இன்பத்தைத் தெரிந்துகொண்டு பிறகு அதைப் பழக்கமாக்கிக் கொள்கிறார்கள்.
எத்தனை சதவீதம் பேர் இந்தப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள்?
மேலை நாடுகளில் 100% பேரிடம் இந்தப் பழக்கம் உண்டு என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் இதுபற்றிய ஆய்வுகள் அதிகம் செய்யப்படவில்லை. ஒரு சில ஆய்வுகள் ஆண்களில் 90%க்கு மேலும், பெண்களில் 60%க்கு மேலும் இதில் ஈடுபடுவதாகக் கூறுகின்றன. உண்மையில் இந்த அளவு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கன்னித்திரை (Hymen) கிழிபடாமல் இருந்தால்தான் ஒருத்தியைக் கன்னியாகக் கருத முடியுமா?
காலங்காலமாக இருந்து வரும் தவறான கருத்து இது உடலுறவு கொள்ளாமலேயே கன்னித்திரை கிழியக் கூடும். விளையாடும் போதோ, விரலால் சுயஇன்பம் அனுபவிக்கும் போதோ அது கிழிந்துவிடக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எல்லோருமே கன்னித்திரை பற்றிய தவறான கற்பனை யில் இருக்கிறார்கள். கன்னித்திரை பெண்புழையை முழுமையாக அடைத்திருக்கும் கதவு என்றும், முதன்முதலாக உடலுறவு கொள்ளும்போதுதான் அந்தக் கதவு உடைக்கபடுகிறது என்றும், அந்த உடைப்பின் போது கசியும் இரத்தம் தான் அவள் கன்னித் தன்மையை அறிவிக்கும் அடையாளம் என்றும் தவறாகக் கருதுகிறார்கள்.
அப்படியானால், உண்மை என்ன? பதிலளிக்கும் முன்பு ஒரு எளிமையான கேள்வி. கன்னித்திரை பெண் புழையை முழுமையாக அடைத்திருந்தால் மாதவிலக்கு எப்படி வெளியே வரும்? உண்மையில் கன்னித்திரை மிக மெல்லிய ஒரு சவ்வுதான். அது பெண்புழையில் நுழைவாயிலின் கீழ்ப் பகுதியில் பாதியளவுக்கும் குறைவாகத்தான் அடைத் திருக்கும். அதன் விளிம்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவத்தில் இருக்கும். கிழிவதால் வரும் இரத்தம் சில துளிகளோ, ஒரு துளியாகவோக் கூட இருக்கும். படுக்கையில் கறை படியும் அளவுக்கு இரத்தப் பெருக்கு ஏற்பட வாய்ப்பில்லை.
கன்னித்திரை பற்றிய மூடநம்பிக்கை பலரது இல்லற வாழ்க்கையை நாசமாக்கியிருக்கிறது. உலகெங்கும் இந்தக் கருத்து நிலவுகிறது. போன நூற்றாண்டில் பிரெஞ்சு சீமாட்டி கள் தங்கள் திருமண இரவில் குருவி இரத்தத்தைப் பயன் படுத்தி கணவன்மார்களை ஏமாற்றினார்களாம்.
உடல் இன்பத்தில் மதனபீடத்தின் (Clitoris) பங்கு என்ன?
பெண்ணுடலில் அதிகபட்ச உணர்ச்சி நரம்புகள் குவிகின்ற இடம் இதுதான். பெண் இன்பம் பெறுவதில் இதுதான் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அளவில் இது துவரம் பருப்பைப் போலவோ அதைவிடச் சிறியதாகவோ இருக்கும். ஆணுறுப்பின் முனைமொட்டும் இதுவும் ஒரே விதமான திசுக்களால் ஆனவை. இதன் மேலே தோல் மூடியிருக்கும். தோலை விரலால் நீக்கி இதன் வடிவத்தைக் காணலாம். இதன் நுனிப் பகுதிதான் வெளியே தெரியும். அடிப்பகுதி ஒரு செ.மீ. ஆழத்தில் பதிந்திருக்கும். அழுத்தினால் யோனி எலும்பில் உராயத்தக்கவாறு அமைந்திருக்கிறது.
பெண் உணர்ச்சி வயப்படும் போது இரத்தம் மதன பீடத்தில் அதிகரித்து (ஆணுறுப்பு விரைப்பது போலவே) அதைச் சற்றே பெரிதாக்குகிறது. அந்த நிலையில் கூட பலருக்கு மூடியிருக்கும் தோலை நீக்கி வெளியே தெரியும் படி இருக்காது. உடலுறவின் சுவர்களில் உள்ள உணர்ச்சி நரம்புகளைவிட பல மடங்கு அதிகமாக மதனபீடத்தில் இருக்கிறது. சுயஇன்பம் பெறும் போது விரல்களால் இதைத் தடவியே உச்சக்கட்ட இன்பத்தை அடையச் செய்ய முடியும். ஆணின் புணர்ச்சிக்கு முன்பாக விரலாலோ, நாவாலோ மதனபீடத்தை வருடிக் கொடுத்து அவளை உணர்ச்சியில் தத்தளிக்க விட வேண்டியது மிகமிக அவசியம். காதல் கலையில் முதலாவதும் மிக முக்கியமானதுமான பாடம் இதுவே.
பெண்ணுடலில் உதடுகள் எந்த அளவுக்கு உணர்ச்சிமிக்கவை?
யோனியின் வெளி உதடுகள் (Labia Majora) ஓரளவுக்குத் தான் உணர்ச்சி நரம்புகளால் பின்னப்பட்டுள்ளன. இதன் முக்கியப் பணி வெளிப்புறத்தில் இருந்து கிருமிகள் உட்புகாதவாறு பாதுகாப்பதுதான். இயல்பான நிலையில் நீரில் நின்றால், நீர் கூட உள்ளே போக முடியாது.
இதன் உட்புறத்தில் வெளிர் நிறத்தில் யோனியின் உள்உதடுகள் (Labia Minora) அமைந்திருக்கின்றன. இதன் மேற்புறம் மதனபீடம் வரை நீண்டிருக்கும். இதன் தோல் வெளிஉதடுகளை விட மென்மையானது. இது லேசான மடிப்புக்களும் அதிக உணர்ச்சி நரம்புகளும் கொண்டது. உணர்ச்சி வயப்படும் போது இது சற்றே தடிமனாகும். புணர்ச்சியின் போது ஆணுறுப்பைச் சுற்றிக் கவ்விக் கொள்ளும். அந்த நேரத்தில் சிவந்தும் காணப்படும். பரவச நிலையை அடைந்த சில நிமிடங்களுக்குப் பின்பு இயல்பான நிறத்துக்கும், நிலைக்கும் இது மாறி விடும்.
பெண்ணுடலில்  ஆழம் ஆளாளுக்கு மாறுபடுமா? 
சராசரியாக எல்லோருக்கும் இது இயல்புநிலையில் ஏழரை செ.மீ. ஆழம்தான் இருக்கும். ஆனால், இது எந்த அளவுக்கும் விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டது. இல்லையேல் ஒரு குழந்தையின் தலை எப்படி வெளியே வரும்? பல பெண்கள் திருமணத்துக்கு முன்பு உடலுறவு பற்றி தேவையில்லாத பயத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். தன்னால் ஒரு ஆணின் ஊடுறுவலைத் தாங்க முடியாது என்று பயப்படுகிறார்கள். இப்படிப் பயப்படும் பெண்களுக்கு மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகள்:
உங்கள் விரலை உள்ளே நுழைத்து சோதித்துப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படும் விதமாக உள்ளே தேவையான இடம் இருக்கிறது. மெத்தென்ற மென்மையான உட்சுவர்கள் உங்கள் விரலின் அல்லது விரல்களின் போக்கிற்கு இசைந்து விரிந்து கொடுப்பதை உணரலாம். வழவழப்பான நீர் உராய்வின்றி விரல்கள் அசைய உதவும். எவ்வளவு பெரிய ஆணுறுப்பையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளத்தக்க விதத்தில்தான் பெண்ணுறுப்பு அமைந்திருக் கிறது. இது ஆணுறுப்பின் அளவுக்கேற்றவாறு விரிந்து கொடுக்கும் இயல்புடையது. ஆனால், புணர்ச்சிக்கு முன்பு அவளது உணர்ச்சிகள் போதுமான அளவுக்குத் தூண்டப் பட்டு மதனநீர் சுரந்திருக்க வேண்டும். இல்லையேல் உள்ளே நுழைப்பதே கடினமாகி வலியை ஏற்படுத்தும்.
முன்பெல்லாம் இந்த மதனநீர் கருப்பை வாயில் இருந்தோ, மற்ற சுரப்பிகளில் இருந்தோ வருவதாக நம்பினார்கள். இந்த நூற்றாண்டில் தான் மாஸ்டர்ஸ் அண்டு ஜான்சன் என்ற மிகப் பிரபலமான பாலியல் ஆய்வாளர்கள் பெண்புழையின் சுவர்களில் இருந்தே மதனநீர் சுரப்பதாக நிரூபித்தார்கள். பெண் காமவயப்பட்ட 30 விநாடிகளில் இது சுரக்கத் தொடங்கும். உடலுறவில் உணர்ச்சி நரம்புகள் முன்பகுதியில் முதல் மூன்றரை செ.மீ. வரைதான் அதிகமிருக்கின்றன. அதனால்தான், ஆணுறுப்பின் அளவைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை என்கிறார்கள். சிறிய ஆணுறுப்பு உள்ளவர்கள் கூட பெண்ணுக்கு முழு இன்பத்தை அளிக்க முடியும்.
காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனாரின் பல பாலியல் கருத்துக்கள் தவறென்று அறிவியல் நிரூபித்து விட்டது. பெண்களை அவர் நான்கு வகையாகப் பிரித்திருந்தார். நான்கு பிரிவுகளுக்கும் அளவுகள் வெவ்வேறாக இருக்கும் என்று கருதியிருந்தார். ஆனால், இயற்கையின் படைப்பில் எல்லோரும் சமம்தான் (சற்றேறக் குறைய) என அறிவியல் நிரூபித்து விட்டது.
ஜி-குறி (G-Spot) என்றால் என்ன?
இது கடந்த பத்தாண்டுகளில் 'கண்டுபிடித்த' ஒரு விஷயம். உடலுறவில் மேற்சுவரில் மூன்றரை செ.மீ.க்கு அப்பால் விரல் நுனி அளவு இடத்தில் உணர்ச்சி நரம்புகள் கொஞ்சம் கூடுதலாக உள்ளன. இதுதான் ஜீ-குறி என்பது. ஒரு பெண் மட்டுமே இதைத் தன் விரலால் அனுபவித்து உணர முடியும்.
உடலுறவின் போது மதனபீடம் தூண்டப்படுகிறதா?
ஆமாம். ஒவ்வொரு முறை அழுத்தும் போதும் யோனி எலும்புக்கும் ஆணின் எலும்புக்கும் இடையில் நசுங்கியும், பல சமயங்களில் ஆணுறுப்பின் மேற்புறத்தால் உராயப் பட்டும் உணர்ச்சியேற்றப் படுகிறது. முன்பெல்லாம். ஆராய்ச்சியாளர்கள் பெண்புழையின் உட்புறம் ஏற்படும் அழுத்தங்கள் அதிகரித்துத்தான் அவள் உச்சக்கட்டப் பரவச நிலையை அடைவதாகக் கருதினார்கள். இப்போதைய ஆய்வு முடிவுகள் புதிய தகவல்களைத் தருகின்றன. கருப்பை வாயைச் (Cervix) சுற்றிலும் பெண்புழையின் ஆரம்பப் பகுதியிலும் உள்ள உணர்ச்சி நரம்புகள் மட்டுமே பரவச நிலையை அடையச் செய்யப் போதுமானதாக இல்லை. மதனபீடம் தூண்டப் படுவதால் மட்டுமே அந்த நிலையை அடைய முடியும். அந்த அழுத்தங்கள் எல்லாம் மதன பீடத்தைச் சுற்றியுள்ள தசைகளை அசையச் செய்து அதை உராய்வடையச் செய்வதன் மூலமே பரவச நிலையை எட்ட வைக்கிறது. பெண் அந்த நிலையை அடையும் முன்பு விந்து வெளியேறி ஆணுறுப்பு தளர்ந்து விட்டால் இணைகள் இருவரும் கலங்கவோ, ஏமாற்றமடையவோ தேவை யில்லை. இது ஒரு விளையாட்டு. மகிழ்ச்சியான விளையாட்டு. வெற்றி தோல்விகள் சகஜம். உதவிக்கு விரல்கள் உள்ளன. ஆண் கற்பனைத் திறன் உள்ளவனாக இருந்தால் பெண்ணைச்சுவைத்து அனுபவிக்கிறான். முன்னை விடவும் இப்போதுதான் அவள் அவனை அதிகமாக விரும்புகிறாள் என்பதை அவன் உணருகிறான்.
சுற்றியுள்ள ரோமங்களை மழித்து விடுவதுதான் சுகாதாரமானதா?
இல்லை. சுத்தமாக இருந்தாலே போதுமானது. 
மாதவிலக்கு நிற்கும்போது பெண்ணின் உடலுறவில் வேட்கை அதிகரிக்கிறதா? குறைகிறதா?
சிலர் அதிகரிப்பதாகவும், சிலர் குறைவதாகவும் கூறுகின்றனர். 'இனி கருத்தரிக்க மாட்டோம்' என்ற பாதுகாப்பு உணர்வினால் சிலருக்கு பாலியல் வேட்கை அதிகரிக்கக் கூடும். பல பெண்கள் மாதவிலக்கு நிற்பதை (Menopause) உடலுறவின் முற்றுப்புள்ளி என தவறாக எண்ணுவதால் வேட்கையை இழந்து விடுகின்றனர். இந்த எண்ணம் மற்றும் பயம் பூரணமான பாலுறவிற்குத் தடையாக அமைகிறது. உடல் ரீதியான கோளாறுகளாலும் பாலியல் வேட்கை குறையக் கூடும். மாதவிலக்கு நிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கருப்பை ஹார்மோன்களின் கரப்பு குறையத் தொடங்கும்; உராய்வுத் திரவம் குறையத் தொடங்கும்; இதனால் உறவின் போது பெண்ணுறுப்பில் வலி ஏற்படக் கூடும். இதை 'ஈஸ்ட்ரோஜன் மருந்து மூலம் சரி செய்யலாம். அவ்வளவு சிரமம் கூட தேவையில்லை. அதற்கென விற்கும் ஜெல்லி போன்ற கிரீம்களையோ எண்ணெயையோ பயன்படுத்தினாலே போதும்.
மாதவிலக்கு நிறுத்தத்தின் போது ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்வது பாதுகாப்பானதா?
அப்போது ஈஸ்ட்ரோஜன் எடுத்துக் கொள்வதால் பாலுறவில் ஈடுபடும் வேளையில் பெண்ணுறுப்பில் வலி ஏற்படாமல் இருக்கும். இது மாதவிலக்கு நிற்பதால் ஏற்படும் மனச் சோர்வையும் தடுக்கும். இதற்கு மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.
கடைகளில் விற்கப்படும், பத்திரிகை விளம்பரங்களில் கூறப்படும் காம ஊக்க மருந்துகளைப் பயன்படுத்துவதால் பலன் கிட்டுமா?
இல்லை. மருத்துவ அறிவியல் ரீதியாக இம்மருந்துகள் நிரூபணம் செய்யப்படவில்லை. நல்ல ஆரோக்கிய உடலும், மனமும் மட்டுமே முழுமையான பாலியல் இன்பத்திற்குப் போதுமானது. கடைச் சரக்குகளை வாங்கி காசை வீணாக்க வேண்டாம். 
உடலுறவில் உச்சக்கட்டம் என்றால் என்ன?
சிலிர்ப்புநிலை என்று கூறலாம். Orgaos என்ற கிரேக்க வார்த்தையில் இருந்துதான் உச்சக்கட்டப் பரவசத்தைக்குறிக்கும் ஆர்கஸம் என்ற சொல் வந்தது. கிரேக்க மொழியில் இதற்கு இச்சையுடன் கூடிய எழுச்சி என்று பொருள்.
உடலுறவில் உச்சக்கட்டப் பரவசம் (ஆர்கஸம்) உச்சக்கட்டப் பரவசம் என்பதை பாலுறவு இன்பத்தின் மனதின் செயல்களெல்லாம் மூளையில்தான் தோன்றுகின்றன என மூளைக் கோட்பாடு கூறுகிறது. "இரு உடல்கள் அருகே ஒன்றிணைந்து இயங்கும்போது மனம் மற்றும் உடல் ரீதியான தூண்டுதல்கள் ஏற்பட்டு, மூளை மூலம் ஏற்படும் நரம்பு சதை (நியூரோமஸ்குலர்) எதிர்வினை (அதாவது இன்பமான புலனுணர்வின் உச்சக்கட்டம்) தான் உச்சக் கட்டப் பரவசம் என்பது.
உச்சக்கட்டப் பரவசம் ஏன்?
உடலுறவு என்பது வெறும் பிள்ளை பெற்றுக் கொள்வதற்கான செயல்பாடு மட்டுமல்ல. இன்பம் என்ற உணர்வே இதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்பம் மற்றும் இனப்பெருக்கம் ஆகிய இரு செயல்களும் நிகழ வேண்டும் என்ற அடிப்படையிலேயே இயற்கை மனித உடலமைப்பை உருவாக்கியிருக்கிறது.
ஒருவர் எப்படி உச்சக்கட்டப் பரவசத்தை அடைகிறார்?
உடலுறவில் ஆர்வத்தில் கிளர்ந்தெழும் ஒருவர், சாதாரண நிலையில் இருந்து காமவெறி நிலைக்குப் போகிறார். இது காம உணர்த்தல் (Sexual Grounding அல்லது Sexual State) என்றழைக்கப்படுகிறது. இந்த நிலை ஏற்பட்டவுடன் மன உடல் ரீதியான உணர்வுகள் மூளையில் உள்ள காம மையத்தில் தூண்டப்படுகின்றன. இதுவும் இன்பம் தரும் நிலைதான். ஆணுக்கு விரைப்புத் தன்மையும் பெண்ணுக்கு பெண்ணுறுப்பில் வழுவழுப்பான திரவம் சுரப்பதும் அப்போது நடைபெறுகிறது. இதற்குக் காரணம் இயல்புக்கு மீறி இரத்தம் ஒரே திசையில் திரள்வதுதான். இதைத் தொடர்ந்து உறவின் தொடர்ச்சியான முயக்கத்தின் போது உச்சக்கட்டப் பரவசம் உண்டாகிறது.
சிலர் உச்சக்கட்டப் பரவசத்தை அடையாமைக்கு என்ன காரணம்?
போதைப் பொருளைப் பயன்படுத்துதல் (குறிப்பாக பிரௌன் சுகர்), மது அருந்துதல், நரம்புக் கோளாறு, கவலை, அக்கறையின்மை, பரபரப்பு ஆகியவை உச்சக்கட்டப் பரவசத்துக்கு எதிரிகள்.
உச்சக்கட்டப் பரவசத்தை எப்படி வர்ணிக்கிறார்கள்?
 ஒவ்வொரு இனமும் இதைப் பலவாறு வர்ணிக்கிறார் கள். ஆனால், அனைவருமே இதை உச்சக்கட்ட இன்பம் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். "இது போதும், இதற்கு மேல் வேண்டாம்" என்ற நிலையில் இருக்கின்றனர். 
தமிழர்கள் இந்த உச்சக்கட்டப் பரவசத்தை, திருப்தி (Satisfaction) என்று வர்ணிக்கிறார்கள். குஜராத்திகள் சுக் (Happiness) என்றும், இந்திக்காரர்கள் சந்தோஷ் (Satisfaction) என்றும், போக்ரா இனத்தவர் ப்ரம்சுக் (Eternal Happiness) என்றும், மராத்தியர்கள் சமதான் (Satisfaction) என்றும், உருதுக்காரர்கள் சுகன் (Perfect Satisfaction) என்றும், சிந்திக்காரர்கள் சாந்தி (Peace) என்றும், தெலுங்கர்கள் சாந்திருப்தி (Perfect Satisfacion) என்றும் காஷ்மீரிகள் குஷி (Ecstasy) என்றும், ஆங்கிலேயர்கள் உச்சக்கட்டம் (Climax) என்றும் கூறுகின்றனர். தங்கள் சமூக கலாச்சார மொழியின் பின்புலத்திற் கேற்ப, தங்கள் எண்ணத்தை உச்சக்கட்டப் பரவச அனுப வத்தை ஒரே வார்த்தையில் வடித்துள்ளனர்.
உச்சக்கட்டப் பரவசம் அடைவதை எப்படி உணர்வது?
இதை விளக்குவது கடினம். ஒருமுறை அடைந்த பிறகுதான் அதை உணர முடியும். உச்சக்கட்டப் பரவசங்கள் மாறுபடக் கூடியவை. பெண்ணுறுப்பில் ஏற்படும் உயர்ந்த பட்ச இன்பச் செறிவு அல்லது ஆணின் விந்து வெளிப் பாட்டை தொடர்ந்து ஒரு தளர்வு நிலை என்று இதைக் கூறலாம்.
ஒருவர் உச்சக்கட்டப் பரவசம் அடைந்ததன் அறிகுறிகள் என்ன?
உச்சக்கட்டப் பரவசம் அடையும்போது சிலர் இன்ப முனகல்களை வெளிப்படுத்தக் கூடும். அல்லது உடல் ரீதியாக இறுகப் பற்றிக் கொள்ளக்கூடும். பரவச நிலையை அடைந்தவுடன் அமைதியாகவும், உடல் ரீதியில் திருப்தி யுடனும் காணப்படுவர். இந்தப்பரவசஅனுபவம் கண நேரத்தில்தில் தோன்றி மறைகிறது. உங்கள்துணையைக் கேட்டறிதலே சிறந்த முறை.
மதனபீடத்தைத் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டப் பரவசத்தை அடைய முடியுமா?
நிச்சயமாக. உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடைய முடியாத பெண்கள் மதனபீடத்தை சுயமாகவோ, ஆணின் முயற்சியாலோ தூண்டி இன்பம் பெற வேண்டும்.
உடலுறவு உறுப்புக்கள் தவிர பரவசநிலையை அடைய உடலின் வேறு உறுப்புக்களும் முக்கியமானவையா?
உடலில் எத்தனையோ இன்பப் பகுதிகள் உள்ளன. அதில் எதை வேண்டுமானாலும் தூண்டலாம். உச்சக்கட்டம் தான் முக்கியமே தவிர, அதை அடைய முறையான வழிகள் என்று எதுவும் இல்லை.
உடலுறவின் போதுதான் ஒரு பெண் உச்சக்கட்டப் பரவசத்தை அடைய வேண்டுமா?
இல்லை. உடலுறவின் போது மட்டும்தான் பரவசநிலை ஏற்படுகிறது என்பது தவறான கருத்து. உறவின் போதான முன் விளையாட்டுக்களின் போது கூட மதனபீடத்தைத் தூண்டுவதன் மூலம் பரவச நிலையை அடையலாம். இதில் திருப்தி என்பதுதான் முக்கியம்.
உச்சக்கட்டப் பரவசத்தை அடைய உறுப்புத் தூண்டுதல்கள் அவசியமா?
இல்லை. பெண்ணின் உடற்கூறில் பல இன்பப் பகுதிகள் உள்ளன என்று ஏற்கனவே கூறினேன். அதில் ஏதாவது ஒன்றுகூட, அவளை உச்சக்கட்டதுக்கு அழைத்துச்செல்லும். மார்புக் காம்புகளைத் தூண்டினால்கூட சிலர் உச்சக்கட்டப் பரவச நிலையை அடைந்து விடுவர்.
பலமுறை உச்சக்கட்டம் என்றால் என்ன?
இதனை தொடர் பரவசம் (மல்டி ஆர்கஸம்) என்கிறார்கள். ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று என அடுத்தடுத்து உச்சக் கட்டப் பரவசங்கள் ஏற்படுவதையே தொடர் பரவசம் என்கிறோம்.
ஆண்களுக்கு 'பலமுறை உச்சக்கட்டம் உண்டா?
இல்லை. பொதுவாக, ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்த பிறகு, மீண்டும் விரைப்புத் தன்மை ஏற்பட்டு, உறவில் ஈடுபட சிறிது நேர இடைவெளி தேவைப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு பலமுறை உச்சக்கட்ட பரவசநிலை இயல்பாகவே அமைந்துள்ளது. அவர்களால் உடனுக்குடன் உச்சக்கட்டப் பரவச நிலையை பலமுறை அடைய முடியும்.
உடலுறவில்  இடைவிளையாட்டு (Interplay) என்றால் என்ன?
உடலுறவின் போது ஆண் பெண் இருவருக்கிடையில் ஏற்படும் முழு செயல்திறன் இயக்கங்களும், உணர்ச்சிகளும்  இடைவிளையாட்டு எனப்படுகிறது.
உடலுறவின் போது முன்விளையாட்டு (Foreplay) அவசியமா?
ஆமாம். நிச்சயமாக. இது வேட்கையைத் தூண்டி இடைவிளையாட்டுக்கு நல்லதொரு தொடக்கத்தை உருவாக்கித் தருகிறது. சரியான அளவு முன்விளையாட்டு இருக்கும்போது, நல்ல எழுச்சியும், பாலியல் ஒத்தியல்பும் உண்டாகிறது.
உறவின் போது பின்விளையாட்டு (Afterplay) தேவையா?
தேவைதான். முன்விளையாட்டைப் போல பின்விளை யாட்டும் அவசியமானது. பாலுறவின் போது, உறுப்புக்கள் இணைந்து செயல்படும் உறவே திருப்திகரமானதாகவும், முக்கியமானதாகவும் கருதப்பட்டு வருகிறது. எனினும், அது: எப்போதும் உண்மையல்ல. “உச்சக்கட்டப் பரவசம் பற்றி நான் கவலைப்படுவதில்லை. அது முடிந்த பிறகும் கூட கொஞ்ச நேரம் விளையாடிக் கொண்டிருந்தால் எனக்கு இன்பமாக இருக்கிறது " என்று கூறும் பல பெண்களை நான் கண்டிருக்கிறேன் என்கிறார் ஒரு பாலியல் நிபுணர். வாத்சாயனரும் தனது காமசூத்ராவில் முன்விளையாட்டைப் போல, பின்விளையாட்டும் சம அளவு முக்கியமானது என்கிறார். அணைத்துக் கொண்டிருப்பதை, பிடித்துக் கொண்டிருப்பதை, கிசுகிசுத்துக் கொண்டிருப்பதைக் கூட உறவு முடிந்த பின்பும் பலர் விரும்புகின்றனர். எளிதில் விரைப்புத் தன்மையை அடைய இயலாதோர் முன் - பின் விளையாட்டுக்களில் கவனம் செலுத்த வேண்டும். இது எந்திர ரீதியான பாலுறவில் இருந்து விடுபட வழிவகுக்கும்.
உடலுறவில் 'பொதுவான கால அளவு எவ்வளவு நேரம்?
இதற்கெல்லாம் பொதுவான கால அளவு கிடையாது. இது தம்பதிகளைப் பொறுத்த விஷயம். இருவரும் திருப்தி அடையும் வரையில் பாலுறவு நிகழ வேண்டும். நீண்டநேர உறவு அதிக இன்பம் தரும் என்பது உண்மையல்ல. எவ்வளவு நேரம் என்பதும் முக்கியமல்ல. எவ்வளவு இன்பம் என்பதே முக்கியம்.
உடலுறவை எந்தளவுக்கு அடிக்கடி வைத்துக் கொள்ளலாம்?
பாலுறவு என்பது இன்பத்தை எல்லையாகக் கொண்டது. எவ்வளவுக்கெவ்வளவு அவர்களுக்கு இன்பம் துய்க்க விருப்பமோ, அவ்வளவுக்கு 'அடிக்கடி அவர்கள் உறவில் ஈடுபடலாம். அடிக்கடி, அவ்வப்போது, வாரமொரு முறை, மாதமிருமுறை என்பதெல்லாம் தம்பதியரைப் பொறுத்து மாறுபடுகிறது. எத்தனை முறை என்ற கணக்கு களை மறந்துவிட்டு, இருவருக்கும் இன்பமும், திருப்தியும் கிடைக்கும் வகையில் உறவில் ஈடுபடுங்கள். இதில் இன்பமும் விருப்பமும் தான் முக்கியமே தவிர எண்ணிக்கை அல்ல.
உறுப்புக்கள் இணைந்து செயல்படாமல், பாலுறவில் இன்பம் கிட்டுமா?
நிச்சயமாக. பாலுறவு என்பது ஆண் பெண் உறுப்புக்களின் இணைந்த செயல்பாடு மட்டும் அல்ல. அதில் முழு உடலுக்கும் பங்குண்டு. பாலுறுப்புக்களின் செயல்பாடு என்பது அதில் ஒரு பகுதிதான்.
புரியவில்லை, எப்படி?
உங்கள் துணைவரோடு உங்கள் விருப்பு, வெறுப்புக்களைப் பற்றி தெளிவாகப் பேசிவிட வேண்டும். இருவருக்கும் விருப்பமானவை எவை (உ-ம். முன் விளையாட்டு,உறுப்புக்கள் இணைதல்) என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். ஒருவருக்கு மற்றவரின் உடலை முழுக்க ஆய்ந்தறிவதில் மோகம் இருக்கக்கூடும். பெண்ணின் மார்புக் காம்புகளை ஆண் சுவைப்பதை சில பெண்கள் விரும்பலாம், வேறு சிலர் ஆணின் மார்புக் காம்புகளைச் சுவைப்பதில் அதிக இன்பம் பெறலாம். துணைவரின் உறுப்பைப் பிடித்துக் கொண்டிருப்பதை, வருடுவதை இன்பம் பெறும் செயலாகக் கருதலாம். பெண் முதலில் தயக்கம் காட்டினாலும், ஆண் அவளிடம் பேசி, அவளுக்கு எதில் இன்பம் கிடைக்கிறது என்றறிய வேண்டும்.
இதற்கு உராய்வுப் பொருட்கள் சில வேளைகளில் பயன்படக்கூடும். வாய்வழிப் உடலுறவில்  அதிகத் தூண்டுதல் ஏற்படுத்தக் கூடியதாகவும், திருப்தி தரக் கூடியதாகவும் இருக்கலாம். உறுப்புகளுக்கிடையிலான உறவு என்பது இரு தொடைகளுக்குள் முடிந்து விடுகிறது. உடலுறவு என்பது உடல் முழுவதும் இயங்குகிறது.
பெண்ணுறுப்பினுள் ஆணுறுப்பு நுழைந்து விட்டதை எப்படி அறிவது?
உடற்கூறியல் படி, பெண்ணுக்கு மூத்திரைப்புழை, யோனி, குதம் என்ற மூன்று திறப்புகள் உள்ளன. மூத்திரைப்புழை மிகவும் சிறியது. உங்கள் சுண்டு விரலைக்கூட அதில் நுழைக்க முடியாது. குதம் மிகக் கீழே உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே இருக்கும் ஒரு இடம்தான் யோனி. புதிதாகத் திருமணம் செய்து கொண்டோருக்குக் கூறுவது இதுதான்: முன்விளையாட்டு முடிந்த பிறகு நல்ல விரைப்புத் தன்மை ஏற்பட்ட பிறகு, அதை உங்கள் மனைவியிடம் விட்டுவிடுங்கள். அவளுக்குத் தெரியும் - சரியான இடம் எதுவென்று. பெண்ணால்தான் அவள் உடற்கூறைப் பற்றி நன்கு அறிந்திருக்க முடியும்.
சில பெண்களால் உடலுறவின் போது உச்சக்கட்டப் பரவசத்தை அடைய முடிவதில்லை, ஏன்?
போதுமான அளவு முன்விளையாட்டில் ஈடுபடாமை, ஆர்வமின்மை,ஆண்உறுப்பின் செயல்பாட்டுக்காக அவசரப் படுத்துதல், பெண்ணின் அதிகக் கூச்சம், தன்னுடைய தேவையை உணர்த்தாமை, கணவன் மட்டும் இன்பம் அடைந்தாலே போதும் என்ற எண்ணம் ஆகியவை பெண்ணின் உச்சக்கட்டப் பரவசத்துக்கு எதிரிகள். மேலும் போதை மருந்து, குற்ற உணர்வு, பதட்டம், கவலை, சோர்வு தளர்ந்த தொடை எலும்பு தசைகள் ஆகியவையும் உச்ச கட்டப் பரவசம் ஏற்படாமல் தடுப்பவையே.
உடலுறவின் போது பெண் உறுப்பில் வலி ஏற்படக் காரணம் என்ன?
பொதுவாக, பெண் முறையான அளவில் வேட்கை அடையாத பட்சத்தில் உராய்வுத் திரவம் சுரந்திருக்காது. அப்போது ஆணின் உறுப்பை உள்ளே செலுத்துவதால் எரிச்சலும், வலியும் ஏற்படுகிறது. தற்காலிகமாக இந்த வலி ஏற்படுமானால், நோய்த் தொற்று அல்லது ஒவ்வாமை காரணமாக இருக்கக்கூடும். அறுவைச் சிகிச்சை மேற் கொண்ட பின்னோ, கன்னித்திரை அடைப்பு காரணமாக வோ, சிறுநீரகக் குழாய் குறைபாடுகள் காரணமாகவோகூட வலி ஏற்படக்கூடும். தொடர்ந்து வலி ஏற்படும்போது மருத்துவரைப் பாருங்கள்.
உடலுறவிற்குப் பிறகு பெண்ணுக்கு வலி வரக் காரணம் என்ன?
பல ஆண்கள் தங்கள் இணையை தூக்க மாத்திரை போலக் கருதி உறவில் ஈடுபடுகின்றனர். தாங்கள் உச்சக் கட்டப் பரவசம் அடைந்தவுடனேயே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல், தங்கள் துணைவியை பாதி வழியிலேயே விட்டுவிட்டு தூங்கி விடுகின்றனர். உடலுறவினால் பெண்ணின் இடுப்பெலும்புப் பகுதியில் மட்டு மீறி ஓரிடத்திலேயே குவிக்கப்பட்ட அழுத்தம், உடனே விடுபடுவதில்லை. இதனால் அடிவயிற்றில் நீடித்த வலியோ, தொடர்ச்சியான கீழ் முதுகுவலியோ ஏற்படுகிறது.
உடலுறவின் போது ஆணுறுப்பு பெண்ணின் கருப்பை வாயை (Cervix) தொட்டால்தான் பெண்ணுக்கு இன்பம் கிடைக்குமா?
இல்லை. இது ஒரு தவறான கருத்து. பெண் வேட்கை அடைந்தவுடன் அவளுடைய கருப்பை சற்று மேலே தூக்கிக் கொள்கிறது. ஆணுறுப்பு தொடுவது இடுப்புக் குழி மூட்டு முக்கோண எலும்பையே (Sacrum) தவிர, கருப்பை வாயை அல்ல.
வித்தியாசமான உடலுறவு நிலைகள் உள்ளனவா? 
ஆமாம். மனித உடல், பல வகையான பாலுறவு நிலை செயல்பாடுகளுக்கு வாய்ப்பளிக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட விருப்பம், சாத்தியம் ஆகியவற்றைப் பொறுத்து பல்வேறு நிலைகளில் ஈடுபட்டு இன்பம் பெறலாம்.
பல நிலைகளில் உறவு கொள்வது பயன் தருமா? 
ஆமாம். ஒவ்வொரு பாலுறவு நிலைக்கும் பலவிதமான பயன்கள் உண்டு. புதுமை என்பது பொதுவான பயன். பெண் மேலிருந்து இயங்கும் நிலையில், விரைவில் ஆண் உச்சக் கட்டத்தை அடைவதைத் தடுக்க முடிகிறது. மேலும், பதட்டத்தினால் விந்து உடனடியாக வெளியேறுவதையும் இதனால் தவிர்க்க முடியும். பக்கவாட்டில், பின்புறத்தில் இருந்து, ஆணுக்கு மேலாகப் பெண் ஆகிய நிலைகள் கர்ப்பிணிகளுக்கு உகந்தவை. 
பெண் மேலிருந்து இயங்கும் நிலையை பெண்கள் விரும்புகிறார்களா?
ஆமாம். இது பெண்களின் வேட்கையை அதிக அளவில் தூண்டுகிறது. மதனபீடத்தை நேரடியாக ஆணுறுப்பு உராய்வதால் எளிதாக இயங்க முடிகிறது. 500 பெண்களை ஆய்வு செய்ததில் 74 சதம் பேர் மேலிருந்து இயங்கும் நிலையை விரும்புகின்றனர் எனத் தெரிய வந்தது. மேலும், பெண்ணும் பாலுறவில் முக்கியப் பங்காற்றுவதாக நினைக்கும் நிலை இதில் உள்ளதாலும் வேட்கை, ஆர்வம் அதிகரிக்கிறது.
சிலருக்கு உடலுறவில் வேட்கை அளவுக்கதிகமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்?
'அளவுக்கதிகம்' என்பதை இந்த இடத்தில் சரிவர நிர்ணயிக்க வேண்டும். நம் பண்பாட்டின்படி ஆண்களின் வேட்கை ஆண்மைக்கு அடையாளமாகவும், பெண்களின் வேட்கை ஒரு கறையாகவும், பாவமாகவும் கருதப்படுகிறது. சில மனவியல் நோயாளிகளுக்கும், உறுப்பில் பிரச்சினை உள்ள சில நோயாளிகளுக்கும் வேட்கை தற்காலிகமாக அளவுக்கதிகமாக இருக்கக்கூடும்.
கர்ப்பமாக இருக்கும் போது உடலுறவு கொள்ளலாமா?
தன்னைவிட வயது அதிகமான பெண்ணுடன் பாலுறவு வைத்துக் கொண்டால் தீங்கு விளையும் என்பது உண்மையா?
இது கடைந்தெடுத்த பொய்யாகும். இதில் எள்ளளவும் உண்மையில்லை. பாலுறவுக்கு வயதோ, நிறமோ, அழகோ எதுவுமே தடையில்லை. இருந்தும், இளமையாகத் தோற்றமளிக்கும் பெண்ணைப் பார்க்கும்போது இயல் பாகவே ஆணுக்கு மோகம் உண்டாகும் என்பது உண்மை. இதைத் தவிர தன்னைவிட வயது அதிகமான பெண்ணுடன் கூடினால் தீங்கு ஏற்படும் என்பது கற்பனையாகும்.
உடலுறவில் அடிக்கடி ஈடுபட்டால் உடல் மெலிந்து விடுமா?
நீங்கள் விரும்பும் போதெல்லாம் உறவு கொள்ளலாம் என்பது தான் உண்மை. இதனால் உடல் எந்தக் காலத்திலும் மெலியாது. பாலுறவின் மூலம் உடல் சுறுசுறுப்படையும். எடுத்த காரியத்தை சிறப்பாகச் செய்வீர்கள். வேலைகளில் மன ஊசலாட்டம் உங்களுக்கு இருக்காது.
வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்துவிடும் என்பது உண்மையா? இல்லை. செக்ஸ் பற்றி நிலவும் தவறான கருத்துகளில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல, பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள்.
அமெரிக்காவில் செக்ஸ் தெரபி அன்ட் ரிசர்ச் சொசைடி யைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்: நடு வயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் உடலுறவு ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை. இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும் விட இந்த வயதில் தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள். இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால், முன்னெப்போதையும் விட இந்த வயதில் தான் தாம்பத்ய சுகத்தை பூரணமாக உணர்கிறோம் என்கிறார்களாம் இவர்கள்.பெண்களுக்கு 50 வயதை நெருங்கும் போது மாத விலக்கு முற்றிலுமாக நின்றுபோய் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிலக்கு நிற்கப் போவதற்கான அறிகுறிகள் தோன்றி, மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும்.
இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும், மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும் போது கூட பெண் உறுப்பில் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத்தனமாக உறவு கொண்டால் இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்க்க எண்ணெய்யோ அல்லது இதற்காகவே விற்பனையில் இருக்கும் திரவங்களையோ  பயன்படுத்தலாம்.
40-50 வயதுகளில் ஆண்களின் உடலிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. அவர்கள் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ் டிரான் இயக்குநீர் மோகத்தின் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது. 20 - 30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும். இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டிரான் 25% அளவுக்குக் குறைந்துவிடுகிறது என பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் உடலுறவில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம். என்றாலும் அதில் ஈடுபடும் போது கிடைக்கும் சுகத்தில் எந்தக் குறைவும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக் கல்லூரி ஆய்வுகள் சொல்கின்றன.
60-70 சதவீத விரைப்புத் தன்மை கூட உறவை அனுபவிக்கப் போதுமானது. இது பற்றி டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள்:
இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக காமம் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கி விடும் மத்தாப்பு போன்றது அது. 20 களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்தி லிருந்து 3 நிமிடத்திற்குள் உச்சக்கட்ட இன்பத்தைத் தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.ஆனால், நடுத்தர வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான்.சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக் குறைவாகவே உச்சக்கட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்த நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது. மனைவியை சிலிர்ப்பு நிலைக்குக் கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்.
2. கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத் திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்த நிலைக்குத் தூண்ட முடியும். எனவேதான், இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.
3. இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறான். ஆனால், நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள். காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் (Estrogen) மற்றும் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) இயக்குநீர்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால், பெண் உடலில் டெஸ்டோஸ்டிரானின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.
4. வயது அதிகமாக அதிகமாக கூச்சம் அகலுகிறது. அனுபவங்கள் உதவுகின்றன. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பக்குவமும் கைகொடுக்கிறது. அதனால் உறவின் போது தயக்கமின்றி புதிய புதிய உத்திகளைக் கையாளத் தோன்றும். செக்கு மாடுகள் போல் யந்திரத்தனமாக இயங்காமல் புதுமைகளை விரும்புவது உடலுறவில் மிக அவசியமானது. உடலுறவு மட்டும்தான் முக்கியம் என்பதல்ல, அதற்கு முன்னும் பின்னும் கொஞ்சல்களும், விளையாட்டும் அதை விட முக்கியம்.
5.சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 30வயதுடையவர்களில் 50% பேர் வாரம் 3 முறையும் 11% பேர் வரம் 4 முறையும், அதற்கு மேலும் உறவு கொள்கிறார்கள். 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் 30% பேர் மட்டுமே வாரம் 3 முறை உறவு கொள்கிறார்கள் என்று தெரிந்தது. ஆனால் 40 வயதுடையவர்களே உடல் ரீதியாகவும் பூர்வமாகவும் திருப்தியடைந்திருக்கிறார்களாம். உணர்ச்சி உறவில் அதிக முறை ஈடுபடுவதல்ல முக்கியம். அதிக திருப்தி அடைவதே முக்கியமானது. அதிக நாட்கள் இடைவெளியின் பிறகு உறவு கொள்வதும் பின் அதற்காக காத்திருப்பதும் ஆர்வத்தையும் செயல்பாட்டையும் அதிகரிக்கவே செய்யும்.
நடுத்தர வயது தம்பதிகள் தங்கள் உடல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாகச் செயல்பட வேண்டும். அப்படியில்லாத போது தான் முரண்பாடு ஏற்பட்டு வீட்டிற்கு வெளியே இணை தேடும் முறைகேடுகள் நடக்கின்றன. புரிந்து கொண்டு செயல்பட்டால் எப்போதையும் விட நடுத்தர வயதில்தான் உடலுறவு திருப்திகரமாக இருக்கிறது.

  
  
24th ஆகஸ்ட் 1995 தேதி இலங்கையில் இலவச மருத்துவ முகாம் நடத்துவதற்காக அமைச்சர் மாண்புமிகு தோண்டமான்  அழைப்பில் நானும் Dr.ராஜ்குமார் MS,FRCS(London) அவர்களும் சென்றோம்.
எனது மருத்துவ தொண்டினைப் பாராட்டி எஸ்.எம். முருகேசன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்,பொகவந்தலாது. உடனே ஒரு கவிதையை வடித்து தந்தார். அக்கவிதை பின்வருமாறு:-

“குறை தீர்த்த குமரேசன்
குன்று மலை மன்னன் மக்கள்
குறை தனை கண்டறிந்து
கோட்டகலை நகர்தனிலே கேம்பொன்டை (வைத்தியம்) ஆரம்பித்தார்
காது மூக்கு தொண்டை நோய் 
கனகாலம் தாங்காது 
கஷ்டப்பட்ட மக்களும் குறை தீர்த்த குமரேசன்
இன்று மட்டும் மல்ல
என்றும் நீர் இளமையுடன்
தான் வாழ்வீர்!”

ஈழத்துத் கவிதைகள் உணர்ச்சிமயமாக இருக்கும் என்பது என்னுடைய எண்ணம். ஆகவே அவருடைய கவிதையை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டேன்.
"சாவில் தமிழ் படித்து சாகவேண்டும் எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்"
“கான மழை காண மண்ணில் பாறைபிளந்து பயன் விளைப்பன் என் ஊரான்''
இவ்வாறு புரட்சி பாக்களை எழுதியவர்கள் ஈழத்து தமிழர்கள் என்பது எனக்கு முன்பே தெரியும். தமிழ் புலவர் எஸ்.எம். முருகேசன் எனது மருத்துவ ஆய்வு பற்றி நன்கு தெரிந்து கொண்டார்.  தினமும் பல தமிழ் பழைய மருத்துவ நூல்களை கொண்டு வந்தார்.அவைகள் எல்லாம் மருத்துவ கருவூலங்கள். 
அவர் சேகரித்து வைத்திருந்த அரிய கோக்கோகம் பிரதிகளை ஆதாரமாகக்கொண்டு இதனைத் தொகுத்துள்ளேன். கோக்கோகம் அல்லது இன்பவிளக்க நூல் என்பது அதிவீரராம பாண்டியர் என்பவர் சமசுகிருத நூலை மொழிபெயர்த்து தமிழில் எழுதிய ஒரு பாலியல் நூல் ஆகும். பாலியல் தொடர்பாக தமிழில் எழுந்த முதல் நூல்களுள் இதுவும் ஒன்றாகும்.

Greetungs by Shri.SEVALIER SHRI.SANTHOSAM ANNACHI

No comments: